மது !

விலை கொடுத்து வாங்கினான் மதுவை
விலைபோய்விட்டது அவன் மானம் மரியாதை!
குடும்பத்தில் செலவுபோக
மீதம்இருந்தது தாலிகொடிமட்டும்!
தன்னலமற்று உழைத்தான் தண்ணீருக்காக!
உடலை தாரைவார்த்து கொடுத்தான் தண்ணீருக்காக!
மகிழ்ச்சியின் விளிம்பிலும்
துக்கத்தின் துவக்கத்திலும் துணைநின்றது
மது!
இன்று அவனை தூக்கிசெல்பவனுக்கும் வாங்கவேண்டும்!
குடி அடுத்தவன் குடியையும் கெடுக்கும் !

எழுதியவர் : (7-Nov-12, 10:37 am)
பார்வை : 132

மேலே