போய்விடு

சூரியன் மறைந்து விடும்
நீல வானில் இருந்து
பனி மழையின் எல்லையில் ...
முற்று பெரும் இந்த வசந்தம்
திரும்ப ஒருநாளும் வராது...
ஏறி மலை வெடித்து
தீ குழம்பு வழிவது போல்
அன்பும் வலிக்கிறது
கண் இமைக்கும்
பொழுதில் சந்தித்து
வேதனை உடன் பிரிந்தோம்
பனி துளி போல் எனது எதிர்பார்ப்பு
உனது அன்பு அவளின் இதயத்துடன்
சேர்ந்து விட்டது
அன்றைய நினைவுகள்
மனதில் நிரந்தரமாகி
யாரும் காணாத இருளில்
கதறி அழுகிறேன் இரகசியமாக
சிரிப்பாலும் கண்ணீராலும் கண்களை
கழுவினேன் ...
கண் மூடினால் இருக்கும்
இருளில் கனவு கண்டேன்
அதை தொலைவில் இருக்கும்
பனி பாறைகளில் மறைத்தேன்
போய் விடு அன்பே
என் மூச்சு காற்றுடன் கலந்து
என் இதயத்தின்
வாழ்த்துக்களை எடுத்து கொண்டு
என் இதயத்தை விட்டு போய் விடு
சூரியன் மறைந்து விடும்
நீல வானில் இருந்து
பனி மழையின் எல்லையில்
முற்று பெரும் இந்த வசந்தம்
திரும்ப நாளும் வராது
எறி மலை வெடித்து
தீ குழம்பு வழிவது போல்
அன்பு வலிக்கிறது
என் இதயத்தின் வாழ்த்துக்களை
எடுத்து கொண்டு
என் இதயத்தை விட்டு போய் விடு
pls போய் விடு ....

வேதனையுடன்
இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (8-Nov-12, 9:20 pm)
சேர்த்தது : ilmunnisha3
பார்வை : 197

மேலே