தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

தீபங்கள்
ஒளிர்வதைக் கண்டு
தீய
எண்ணங்கள் மறையட்டும்.!

உறவுகள்
கூடி மகிழ்வதைக் கண்டு
உள்ளத்தில்
உற்சாகம் பெருகட்டும்.!

இனிப்புகள்
உண்பதைக் கண்டு
இன்று போல்
இன்பங்கள் நிலைக்கட்டும்!

பண்டிகை
திருநாளில் பகை மறந்து
பந்த பாசங்கள்
பசுமையாய் வளரட்டும்.!

சகல
சந்தோசமும் ஒன்று கூடி
சமத்துவம் மலர்ந்து
சகோதரத்துவம் உண்டாகட்டும்.!


(என் அன்பிற்கினிய தோழர்கள் , தோழிகள், அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்.)

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (11-Nov-12, 8:17 am)
பார்வை : 389

மேலே