தேடுகிறேன் , தெரியவில்லை ...

பசியும் பட்டினியும் இல்லா மக்களை
சாதி மதமே அறிந்திடா சமுதாயத்தை
பிறந்த மண்ணை மதிக்கும் மனங்களை
ஆசையும் கோபமும் இல்லா இதயத்தை
நேர்மை தவறிடா நேசமுள்ள அரசியல்வாதியை
பரிவும் பாசமும் இதயத்தில் உள்ளவரை
பகிர்ந்து அளித்திடும் பணக்கார மனிதரை
உண்மையே பேசிடும் உயர்ந்த உள்ளங்களை
ஏழைகளுக்கு உதவிடும் எண்ணம் உள்ளோரை
எல்லோரும் சமம்என என்றும் நினைப்பவரை

எழுதியவர் : பழனி குமார் (19-Nov-12, 1:18 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 129

மேலே