என்ன தலைப்பிடுவது

கட்டவண்டி சக்கரம் ஏறி
கால்களால் மித்திபட்டு
கந்தர கோலமாய்
செம்மண் சாலையில்
செத்துகிடந்த - ஒரு
ரோஜா மலரின்
நசுங்கிய இதழ்
மேலமர்ந்து
ஒற்றை சிறகுடைந்த
பட்டாம்பூச்சி
தேன் குடிக்க,
வண்டுகள் கூட்டம்
அதை விரட்டியடித்து
இதழ் இடுக்குகளில்
ஊடுருவி
உறிஞ்சி தேனெடுக்க....

இதற்க்கு என்ன தலைப்பிடுவது ?
வன்புணர்ச்சி,
இனவெறி,
நகரமயம்,
பூக்கள் தட்டுப்பாடு,
இறுதி ஊர்வலம்,
ஏகதிபத்தியம்,
ஆணாதிக்கம்,
வறுமை,
சோமாலிய பசி,
பெண்ணின கொடுமை,
பிணந்தின்னும் காமம்.


------ தமிழ்தாசன் -----

எழுதியவர் : தமிழ்தாசன் (21-Nov-12, 11:22 am)
பார்வை : 178

மேலே