கலாபக் காதலன்
பார்த்தால் பசி தீரும்
பார்க்க பார்க்க
பசி ஏறும்
நெருக்கம் உணர்ந்தால்
மஞ்சள் சிவக்கும்
உள்ளுற கள் ஊறும்
தனிமையில் என்னை
ரசிக்கவும் விடுவான்
தவிக்கவும் விடுவான்
களிப்புறும் போது
கண்ணீர் வந்தது
சினங்களின் போது
சிரிப்பும் வந்தது
விருப்புகள் மீது
வெறுப்பும் வந்தது
வெறுப்புகள் மீது
விருப்பும் வந்தது
படித்து முடித்தும்
சுவை உணராததால்
மீண்டும் மீண்டும்
விரித்து படிக்க
துடிக்கும் இலக்கிய
கவியும்
காதல் காவியங்களில்
கலாபக் காதலனும்
அவனே