வாழ்க்கையின் நிலை............
கைபேசி விளித்த காலங்கள் மறைந்தது.....
ஒரு நேரத்தில் உன் இடைவிடா அழைப்புகள்,
எனக்கு இப்போதோ அது கனவாகிப்போனது,
விடிய விடிய பேசிய தருணங்கள் கானல் ஆகிப்போனது.....அந்த நினைவுகள் மட்டுமே என்னில் நீங்கா
இடம்பெற்று, எந்தன் இந்நாளைய துணையாய்
நிழலைப்போல நிலைத்து விட்டது.
வாழ்க்கையில் ஆயிரம் தருணங்கள் வரும் போகும்
ஆனால் உன்னுடனான அந்த பொன்மணித்துளிகள்
மட்டும் போகாமல் பிடிவாத குழந்தையாய்
போக மறுக்கிறது.
ஆயிரம் முறை நீசொன்ன ஐ லவ்யுவும், நூற்றுக்கணக்கில்
நீதந்த முத்தங்களும் கூடவே கொசுறாய் வந்து நிலைக்கிறது
வாழ்க்கையே வேண்டாம் என நினைத்து என்னையே வதம் செய்ய
நினைக்கும் தருணங்களில் வாய்விட்டு சிரித்து நகைக்கிறது.
சாகவும் முடியாமல்,வாழவும் வழித்தெரியாமல்
உயிரற்ற நடைபிணமாய் வாழும் நிலைக்கு என்ன பெயர் சொல்லி
அழைக்க?
அதையாவது எனக்கு சொல்லிவிடு பெண்ணே..... வாழ்க்கையின் நிலையாவது
அறிந்தவனாகிப்போவேன் உன்னால்.