கலப்பு மணம்

மனதுக்கு பிடித்தவளை
மணமுடித்தேன் மகிழ்ச்சியோடு...

ஆதரித்தவர்களுக்கு மிதியும்
அடியையும் மிஞ்சியது...

சாதிச் சாக்கடையால்
சந்தோசத்தை தொலைத்தேன்...

கருவில் சுமந்தவளை
கண்ணீரில் தள்ளி...

தோளில் சுமந்தவரை
துக்கத்தில் ஆழ்த்தி...

உடன் பிறப்புகளுக்கு
உயிர் பயங்காட்டி..

சுற்றிய ஊரை
சூறையாடக் கொடுத்து...

கட்டிய வீடுகளை
காவு கொடுத்து...

வளர்த்த உயிர்களை
வாரிக் கொடுத்து,,,

சாதித்ததுதான் என்ன
சாதிப் புழுக்கள்...

எப்போதிந்த புழுக்கள்
ஏற்றுக்கொள்ளும் கலப்புமணத்தை...

எழுதியவர் : சுபா பூமணி (1-Dec-12, 5:51 pm)
பார்வை : 270

மேலே