கீழக்கோட்டை சுபா - சுயவிவரம்
(Profile)
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : கீழக்கோட்டை சுபா | 
| இடம் | : Keelakkottai | 
| பிறந்த தேதி | : 14-Apr-1989 | 
| பாலினம் | : பெண் | 
| சேர்ந்த நாள் | : 29-Sep-2012 | 
| பார்த்தவர்கள் | : 350 | 
| புள்ளி | : 102 | 
என் பெயர் சுபா பூமணி. எனக்கு கவிதை படிப்பதில் மிக ஆர்வம். இப்போது எனக்கு தெரிந்த எளிய தமிழில் கவிதை எழுத ஆரம்பித்து உள்ளேன்.
படிக்கும் வயதில் கற்றுகொண்டது 
பட்டினியுடன் வறுமையையும் மட்டும்
பாதியில் விட்டது படிப்பைமட்டுமல்ல 
என் பசியையும் தான்...
ஆம்!ஒருவேளை உணவுக்கு 
இருவேளை பாத்திரம் கழுவி 
ஒரு சாண் வயிற்றை
ஓரளவு நிரப்பினேன்...
எஜமானன் வீட்டில் எஞ்சியதை 
சாப்பிட்டதால் என்னவோ அவன் 
எஞ்சவிடவில்லை என் கற்பை 
எஞ்சியது என்னவோ உயிர் மட்டும்தான்...
நகரத்திற்கு வாழத்தான் வந்தேன் 
அப்போது தெரியவில்லை அது நரகமென்று
பணம் சம்பாதிக்க அவா இல்லை
மானத்தோடு வாழ போராடினேன்...
மானத்தை காக்க அலுவலகத்துக்கு 
வேலைக்கு சென்றால் -அறையை 
சுத்தம் செய்தால் போதாதென்று 
மேலாளரை அனுசரிக்கவும் வேண்டுமாம்...
கை
பூப்பெய்தியதும்
பூத்தது பயம்
பெற்றோருக்கு...
ஒன்னாப்பு படிக்கையில 
அஞ்சு பைசாக்கு
ஆரஞ்சு முட்டாய் வாங்கி
ஆறு பேரு 
பங்கு வச்சி தின்னோம்...
ரெண்டாப்பு படிக்கையில 
அம்பது பைசா
அழி ரப்பர
நாலுபேரு
பிரிச்சிவச்சிகிட்டோம்...
மூனாப்பு படிக்கையில 
ஒரு ரூவா
பென்சில 
மூணுபேரு 
ஒடிச்சி வச்சிகிட்டோம்...
நாலாப்பு படிக்கையில
ஒன்னாருவா ஸ்கேல 
ரெண்டுபேரு
ஒடிச்சி வச்சிகிட்டோம்..
அஞ்சாப்பு படிக்கையில
பேனா மைய
பெஞ்சில தொழிச்சி
மாத்தி மாத்தி 
ஒதவிக்கிட்டோம்...
பங்கு வச்சதுக்கும்
பங்கம் வந்து,
ஒதவின்னு போய் 
ஓரளவு பிரிஞ்சி, 
ஆறாப்ல பள்ளிகுடம் 
மாறிப்போனதுமில்லாம
பாசமும் மாறித்தான் போனது...
உன்னன்பு கிடைக்கதிருந்தால்
உண்மையான அன்பைத்தேடியே
என் வாழ்நாள் ஓடியிருக்கும்...
பெண்ணென்ற போர்வைக்குள்
அன்பொன்று மட்டுமல்ல,
ஆளுகையும் ஒளிந்திருப்பதை 
அறிந்திருந்தவன் நீயல்லவோ...
தோல்வியைக்கண்டு துவண்டுபோகையில்
தோள்கொடுத்து தட்டியெழுப்பி
தோல்வியை தோற்கடிக்கும்
வித்தையை கற்றுக்கொடுத்தாயே...
பூச்சரம் தொடுக்கும் கரத்தில்
துப்பாக்கி ஏந்தி நிற்கவும்,
அரியணையில் அமரவும்,
ஆட்சி பல புரியவும்,
இமயம் தொடவும்,
நிலவில் தடம் பதிக்கவும்,
விமானத்தை கையாளவும்
எவ்விடத்திலும் பெண்ணென்பவள்
முன்னிற்க நிச்சயமாக 
ஓர் ஆணின் உறுதுணையோ,
ஊக்கமோ தான் காரணமென்பதை 
சாதித்த பெண்கள் 
சல்லியளவும் மறுக்க
---------------------------------------------
வானவில்லை 
படம் பிடித்து
மூளை மடிப்புக்களில்
பதியவைத்தேன்.
மூளை சும்மா இருக்குமா? 
வண்ண வண்ணமாய்
நிறம் பிரித்து 
தரம் பிரித்து 
காதலியின் நினைவில் 
கவிதை தா 
என்கிறது ... 
கற்பனையில் பாதி எழுதினேன்.
----------------------------
வானவில்லாய் 
வலம் வந்தவள்
கானல் நீராய்
காணாமல் போனாள்
காணாமல் போனால்
கலங்காமல் இருப்பேனா ? . 
நிறங்களை பிரித்து
காதல் அம்புகளாக 
அவளிடம் அனுப்பவேண்டும். 
-----------------------------
நிறங்களை 
ஏழு பிரித்து விட்டேன்
ஒவ்வொரு நிறத்திலும்
அம்பு செய்து 
அன்பு தகவல் 
அனுப்பிட வேண்டும்.
எப்படி
ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,
கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?
எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,
முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,
தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,
அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,
கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,
உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர