தாலாட்டு
வெள்ளி கொலுசு கட்டி
உறங்கும் என் தங்க கட்டி
சின்ன கண்மணியே
சீராளா கண்ணுறங்கு !
வெள்ளி கிண்ணத்துல
வெள்ளை பாலு நனூட்ட
செல்ல கண்மணியே - என்
சீராளா கண்ணுறங்கு!
செவப்பு பொட்டு வச்ச
செவளக்காளை துள்ளி வர
சீர்வரிசை எடுத்துகிட்டு
தாய்மாமன் தான் வருவார்
மல்லிகைப்பூ தொட்டிலிலே
மரிகொழுந்தே கண்ணுறங்கு !