மனிதர்கள் இனிமையானவர்கள்......!
![](https://eluthu.com/images/loading.gif)
மலர்களை தேடி ஆராய்ந்தேன்
இனிய தேனின் இன் சுவை அறிந்தேன்
மனிதர்களை தேடி ஆராய்ந்தேன்
இதய அன்பின் இன் சுவை புரிந்தேன்.....
புரிந்து கொண்ட போது.....எனது
விழிகளில் அழகு மட்டும் தெரியவில்லை
மனித நேயத்தின் நேர்மறை வார்த்தை
இனிமை என்று எனக்கு விளங்கியது ..
என்னை எதிரி என்று நினைத்துக் கொண்டிருப்பவனை.....
இப்போது......
என் மார்போடு சேர்த்து அனைத்துக் கொள்கிறேன்
ஏனோ......
எங்கள் உணர்வுகளுக்குள் இந்த நொடியில்
இனிக்க வைக்கிறது சகோதர பாசம்........!
நிச்சயமாக சொல்கிறேன்......
மனிதர்கள் இனிமையானவர்கள்......!