காக்கைச் சிறகினிலே.....!

கடலின் வண்ணம் கொண்டவனே
காதல் உள்ளம் கொண்டவனே

வெண்ணையைத் திருடித் திண்றவனே
வேதத்தில் வாழ்க்கையைச் சொன்னவனே

அன்னையின் அணுக்களுக்கெல்லாம் அன்பைத் தந்தவனே
ஆடைகளைத் திருடி அகம் மகிழ்ந்தவனே

மேகத்தின் வண்ணத்தில் காதலின் வண்ணத்தைக் காட்டியவனே
மோகவலை விரித்து காமத்தை காணாமல் செய்தவனே

காவியத்தின் கனியே கீதையின் நாயகனே
கருவிலே நின் பந்தம் கிடைக்க நான் என்னதவம் செய்தேனோ....!

எழுதியவர் : நா.வளர்மதி. (22-Dec-12, 8:00 am)
பார்வை : 168

மேலே