தீராத காதல்...!
தீராத காதல் உன்மீது
தீராதது இந்தக் காதல்!
பகலில் பக்தி செய்தேன் நினைவில்
இரவில் காதல் செய்தேன் கனவில்!
காற்றாக வந்து காதல் ஸ்பரிசம் தருகிறாய்
வெயிலாக வந்து மகிழ்ச்சியைக் கூட்டுகிறாய்!
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கோடி சுகங்கள் தருகிறாய்
கொஞ்சமும் பேசாமல் இருந்து அன்பைத் தருகிறாய்!
உன் அரவணைப்பில் நான் வாழ வேண்டும்
நதியைப் போல தழுவியே செல்கிறாய்!
கண்களால் பேசுகிறேன்
செல்லக் கண்ணா கண்டுகொள்ளாமல் இருக்கிறாயே!
மனதால் பேசுகிறேன்
மயக்கம் கொண்டே என் மடியினில் துயில்கொள்கிறாய்......!