ஒரு பூவின் கதை(பாலியல் கொலை பற்றி என் சிந்தனைகளுக்கு எட்டியவை)
இதோ ஒரு "பூ "
"காகித பூவாய் " கசக்கி போடப்படடது சாலையில்
"காந்தியின் கனவும் "
"பாரதியின் குரலும்" பாழாகிபோச்சு !
நினைக்கும் போதே நெஞ்சடைக்கிறது
"துகிலுரிக்கும் துட்சாதனங்களுக்கு "
இன்னமா இடம் கொடுக்கிறாள் "பூமித்தாய்" !
அங்கே பறிபோனது ஒருத்தியின்
மானம் மட்டும் அல்ல ,
அது ஒவ்வருவருக்கும் "அறுவருக்கும்"
செயலன்றோ !
"பெண்மையை போற்றிய பாரதம் "
இன்று தலை குனிந்து நிற்கிறது
"உலக அரங்கில் "!
"பூஜைக்கென்று" வந்த மலர்
இன்று சில "அரக்கர்கள்" கையில் சிக்கி அலங்கோலமாய் மாண்டிருக்கிறது ,
பெற்றவள் கடவுளென்றால்
மற்றவர்கள் எல்லாம் யார் ?!
"அடுப்படியில்" கிடந்தவர்கள்
"அண்டம்" தாண்டி சதிக்கையில்
மனிதனின் பார்வை மட்டும்
மாறுகின்ற நாள் என்றோ !
"பூமித்தாய் ,பாரத தாய் , தமிழ் தாய்
கடல் தாய்" என்று எல்லாவற்றையும்
தாயென பார்க்கையில் பெண்ணின்மேல் மட்டும் ஏன் இந்த பிற்போக்கு பார்வை !
காதல் கொஞ்ச வேண்டிய பெண்களிடத்தில்
காமப்பார்வை , உனக்கும் இருக்கிறார்கள்
"தாயும் தங்கையும்" ஒவ்வொரு கணமும் நினைத்து ஒழுக்கத்தை போற்று!
"பாழ் சட்டம்" இன்னும் கருணை பார்த்துக்கொண்டிருக்கிறது இந்த கயவர்களிடத்தில்
"தூக்கும் கூட இவர்களுக்கு சாதாரணம் "
துண்டு துண்டாக்கபடவேண்டும் இவர்களின் கைகளும் கால்களும் !
இதுவே இறுதியாய் இருக்கட்டும் ,
"கொலைகள் கூட மன்னிக்கப்படலாம் "
"கொக்கரிக்கும் இளைஞனின்" இச்சைகலையுமா"
"வரலாறு படைக்கும் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்"
இன்றைய இறுதி தீர்ப்பு நாளைய சமுதாயதிர்கவது "பாடமாய்" அமையட்டும் !
ஒவ்வருவரின் "உணர்வையும் மதிப்போம் "
"ஒழுக்கத்தை போற்றுவோம்"
"மனைவி ஒருவளை மட்டும் நேசித்து "
மற்றவர்களை நேசிப்போம் , தாயாக , தங்கையாக !