அருந்ததி ராய்க்கு எதிராக விஷத்தை கக்கும் ஊடகங்கள்....!

அருந்ததி ராய்க்கு எதிராக விஷத்தை கக்கும் ஊடகங்கள்....!

அருந்ததி ராய்க்கு எதிராக விஷத்தை கக்கும் ஊடகங்கள்....!

பிரபல சமூக ஆர்வலரும் பத்திரிக்கை பிரமுகருமாகிய அருந்ததிராய் டெல்லி கற்பழிப்பு பற்றி கூறிய சில கருத்துக்களை மிகைப்படுத்தி சில ஊடகங்கள் அவர்மீது அவதூறுகளை பரப்பிவருகிறது...

அவர்கூறிய வார்த்தைகள்...

"கற்பழிப்பு எங்கு நடந்தாலும் அவை கண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் எல்லா விஷயங்களையும் போன்று இந்த விஷயத்திலும் நம்நாட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
குஜராத்தில் பலநூறு முஸ்லீம் பெண்களின் கற்புகள் காவி கொடூரர்களால் சூறையாடப்பட்ட போது இந்த ஊடகங்கள் ஏன் அமைதி காத்தன?

காஷ்மீரில் அபலை பெண்கள் இந்திய ரானுவத்தினரால் சீரழிக்கப்படும்போது அவர்களை தூக்கிலடவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படாதது ஏன்?

சட்டீஸ்கரில் ஆதிவாசி பெண் சோனி சோரி போலீசாரால் கற்பழிக்கப்பட்டு அவளுடைய மர்ம உறுப்பு கற்களால் சேதபடுத்தபட்ட போது ஏன் இவர்கள் வாயை திறக்கவில்லை?

இப்போது டெல்லியில் கற்பழிக்கப்பட்ட பெண் பஸ்சிலிருந்து நிர்வாணமாக தூக்கி வீசபட்டப்போது நூற்றுகனக்கானோர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனரே தவிர அவளுக்கு தன்னுடைய சட்டையை கழட்டி தரக்கூட யாரும் முன்வரவில்லை..

கற்பழிக்கப்பட்ட போது எந்த ஜாதியாகவும்,மதமாகவும் இருந்தாலும் பாகுபாடில்லாமல் அதனை எதிர்க்கவேண்டும் இதுவே என்னுடைய கோரிக்கை என்று கூறியுள்ளார்.

சமீபகாலமாக முஸ்லீம்களுக்கும்,ஆதிவாசிகளுக்கும்,தலித்துகளுக்கும் ஆதரவாக கருத்து தெரிவுக்கும் அருந்ததிராய்க்கு எதிராக அவரை தேசதுரோகி எனவும் அவரை தாக்க வேண்டும் என்றும் ஏசியாநெட் போன்ற காவி ஊடகங்கள் மக்களை உசுப்பெத்திவிட்டுள்ளனர்...

ஆக, கற்பழிப்புக்கு எதிராக இனிமேல் ஈடுபடுவர்களுக்கு முப்பது ஆண்டுகள் சிறை தண்டனையும், ரசாயன ரீதியாக ஆண்மை நீக்கமும் செய்வதற்கு, இது போன்று தண்டனை கொடுப்பதற்கு ஒரு சட்ட வரைவு கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டம் தீட்டி வருகிறது. சட்டம் பற்றியெல்லாம் நமக்கு கவலையில்லை.

பாலியல் வன்கொடுமைக்கு பின்புலமாக உள்ள, அதாவது குத்துப்பாட்டு டான்ஸ் ஆடும் நிகழ்சிகளை தொடர்ந்து ஆபாசமாக காட்டி வரும் தொலைக்காட்சிகளும், அதன் உரிமையாளர்களும் அந்த நிகழ்ச்சியின் இயக்குனர்களும், தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் ஆபாசமும் வன்முறையும் பரப்பி வரும் அணைத்து முன்னணி தமிழ் திரைப்பட கதாநாயகர்களுக்கும் அதன் இயக்குனர்களுக்கும் இந்த தண்டனை வழங்கப்படுமா என்பதே நமக்கு வரும் சந்தேகம்...

ஒருவேளை இந்த சட்டம் எல்லோருக்கும் தான் என்றால் ரஜினிகாந்த் கமலஹசான் விஜய் அஜித் என்று மட்டுமல்லாமல் இவர்களை வைத்து இயக்கிய அணைத்து இயக்குனர்களும் டான்ஸ் மாஸ்டர்களும் அணைத்து நடிகைகளும், இவை தவிர வார பத்திரிக்கைகளில் நடுப்பக்கத்தில் பாலியல் வன்முறையை தூண்டும் போஸ்டர்களை போடும் பத்திரிக்கை ஒனர்களையும் அதன் ஆசிரியர்களையும் இந்த தண்டனைக்கு உள்ளாக்குவார்களா..?

அல்லது வழக்கம் போல அம்புக்குத் தான் தண்டனையா..? என்று கேட்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (30-Dec-12, 7:59 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 113

சிறந்த கட்டுரைகள்

மேலே