தைமகளே வருக...(பொங்கல் கவிதை போட்டி)

விரித்து வைத்த பச்சை பாயும்
உலர்ந்து விட காத்திருந்தோம்
காய்ந்துவிட்ட வெண் மேகம்
கருக்கட்ட வேர்த்திருந்தோம்
ஒழிந்து இருந்த கருங்குயிலும்
ஒலி எழுப்ப கேட்டிருந்தோம்

களிப்பு கொள்ளும் நாள் இதென
விழிப்பூட்டி வந்தாய்
கதிரொளியின் தலைவன் தன்னை
வின் கூந்தலில் சூடி வந்தாய்
மழை தன்னில் நீராடி
வைக்கோலை மேனி சூடி
தை மங்கை நீ
பிறந்து தவழ்ந்து வந்தாய்
தை மகளே வருக ................
கை நிறைய களிப்பு தருக........

எழுதியவர் : sailaja (4-Jan-13, 9:51 pm)
பார்வை : 182

மேலே