sailaja - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sailaja |
இடம் | : srilanka |
பிறந்த தேதி | : 29-Dec-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Nov-2011 |
பார்த்தவர்கள் | : 186 |
புள்ளி | : 33 |
14 வயதில் இயற்கையில் உதித்தது ,15 வயதில் ஆட்பட்டுவிட்டேன் ,17 வயதில் நாள் படப்பட அடிமைப்பட்டேன் ,என் வயதுகளின் முடுக்குகளில் எங்கோ ஒழிந்த என் வாரிசுரிமை இது.....
தடுப்பின்
தொடுகையில்
தவிக்கும்
தடயம் நான்
தடுப்பின்
தடயம் அல்ல
தனிமையின்
தடயம் நான் !
தடுப்புப் போட்டது
தனியாக பலகையால்
தான்
தருவைக் கிழித்து
தடுப்புப் போட்டனர் !
தாவரம் இல்லா
தனிப் பாலை அது
தண்ணீரும் இல்லை
தாகத்தில் நான்
தவிக்க
தருவாரும் இல்லை
தவிர்க்கப்பட்டது ஏனோ ?
தனிமையில் சிந்திக்கும் நான் !!?
நான் ,
இன்னும் பாடுவது இரவில் தான் ,
விண்ணும் ஓய்ந்து இருளை போர்த்தும்
இரவில் தான் ......
மண்ணும் வெந்து வாடி உறங்கும்
இருளில் தான் ......
கண்ணும் மூட கட்டிடும் இமைகளை
இரவில் தான் ......
அந்த ,
இரவில் தான் .....
ஈருளில் பயந்து நிலவைத் திருடி
கருப்பு கூரைக்குள் ஒழித்து வைத்தேன்
இருண்ட கூரை
திறந்தது கண்ணை .....
திறக்க எண்ணிய கதவைக் கூட
உரக்கச் சாத்தி வைத்தேன்
உள்ளிய யாரும் வந்து பார்த்தால்
உலகின் சந்திரன் என்னிடம் என்று ?
கனவு கூட காணவில்லை
காலை மாலை வந்தாலும்
கண் மூடித் தூங்கவில்லை
கதிரவன் பட்டு வியர்க்காமல்
காற்று
கனாக்களின்
கவிதைக்காரி நான் ............
கருமையில் ஒரு சொட்டு
ஒளித் துளியிலும்
கனவு காண்பவள் நான்
என்
கனவுகள்
கருமையிலும் ஒளிப்பிழம்பு
கண்ட
கனவுகளை
கட்டி வைத்தேன்
கண்ணுக்குள்ளே
கண்கள் திறக்க முன்னே
கனவினிலும் தனிமையில் .......
கலைந்தபோதும் தனிமையில் ......
இனிமேலும்
இது போதும்
கணவனில் வாழ்ந்த எனக்கு
இப்போது
கனவுகளே பிடிப்பதில்லை
தூங்கவும் நோக்கம் இல்லை
தூரப் போ கனவே
தூங்க வேண்டும் எனக்கும் ..........