ஒளி முருகவேள் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஒளி முருகவேள்
இடம்:  அல் ஏயின் - யுனைடட் அரப் எம
பிறந்த தேதி :  19-Jan-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Oct-2016
பார்த்தவர்கள்:  335
புள்ளி:  9

என்னைப் பற்றி...

காட்சித் தகவலியல் (விஷுவல் கம்யுனிகேஷன்) முடித்து புகைப்படக்கலையிலும், சினிமாவிலும், கவிதையிலும் பெரும் ஆர்வம் கொண்டவன்! தற்காலிகமாக துபாயில் பணிபுரிந்து வருகிறேன்!

என் படைப்புகள்
ஒளி முருகவேள் செய்திகள்
ஒளி முருகவேள் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2020 1:07 pm

ஓய்ந்த மழைச்சாலையில்
கிடந்த காகிதத்தில்
ஒரு கவிதை!

எடுத்தான், படித்தான்
கடைசி வரி,
'படித்ததும் கிழித்துவிடு!'

படம்பிடித்து பேசுபுக்கில் போட்டான்,
கிழிக்காமல் கீழே போட்டான்.

'த்தூ..'வெனத் தெளித்தது
நீரில் விழுந்த கவிதை!

மேலும்

ஒளி முருகவேள் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2020 11:57 am

கதவை மூடென்றால்
வாசலை மூடினான்!
இவனுக்கெப்படி காதல் விளங்கும்!

மேலும்

ஒளி முருகவேள் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2017 2:15 pm

காதலில் தோற்கும் ஆண்கள்
கவனமாய் கவனியுங்கள்!

'தோல்' ஆண்பால்
தோல்'வி' பெண் பால்

அவள்தான் 'தோல்வி'
'தோல்வி'களை விட்டுவிடுங்கள்!

ஆசிட் அடித்தால்
'தோல்' தான் சிதையும்
நியாபகம் இருக்கட்டும்!

- ஒளி முருகவேள்

மேலும்

நேசித்தவள் கிடைக்காத போதிலும் அவளுக்காய் பிராத்தனை செய்பவனே உண்மைக் காதலன் 21-Aug-2017 7:01 pm
ஒளி முருகவேள் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2017 8:46 am

இருக்கைகளுக்கு நடுவில்
பொதுவாக ஒரு கட்டைக் கை!

என் கை நகர்ந்ததும்,
அவர் கை வைத்தார்!

அவர் கை நகர்ந்ததும்,
என் கை வைத்தேன்

கை இருப்பவனுக்கும் தேவைப்படுகிறது
கட்டைக் கை!

- ஒளி முருகவேள்

மேலும்

ஷிபாதௌபீஃக் அளித்த படைப்பில் (public) thoufik rahman மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Jul-2017 7:26 am

!!!தேசத்தின் அவலம்!!!

வெள்ளையனின் விடுதலையால்,
அடிமையாகிப் போனோமே,
தலைவர் என்ற போர்வையிலே,
தரம்கெட்ட மிருகம் எல்லாம்
ஆட்சியாளர் ஆனரே!

உடுத்தும் உடையைக் கொண்டு
பிரித்தார்கள், ஊனமுற்ற மூளையர்கள்.
நிறங்கள் பார்த்து பணியமர்த்த,
நீதியற்று நின்றோமே!

நீதி கேட்டு போனோரை,
சாதி சொல்லி பிரித்தார்கள்.
சாதிக்கொரு மொழியைத்தந்து,
மொழியைக் கொண்டு போர் தொடுத்தார்கள்!

போரைக்கொண்டு தேசத்தினை,
அருதியிட்டு பிரித்தார்கள்.
அருதிக்கொண்டு நீரைக்கூட,
தர மறுத்தார்கள்!

நீரும் இல்லை, நிலமும் இல்லை,
சோறு கேட்டு நின்றோரை,
பிச்சைப்போட்டு(இலவசம்) கொன்றார்கள்!

சடலம் கூட அரசியலாகி
அகதியாகி

மேலும்

நன்றி தம்பி 01-Aug-2017 8:29 pm
அண்ணா அழகு 31-Jul-2017 6:30 pm
நன்றிகள் கோடி!!!! 17-Jul-2017 7:47 pm
உலகத்தின் நடைமுறையை கண்ணுக்குள் காட்டுகிறது கவிதை 17-Jul-2017 7:42 pm
ஒளி முருகவேள் - ஒளி முருகவேள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2017 5:59 pm

காகிதமே எனக்கு ஒன்றைச் சொல்!

உன்னைப் பேனாவால் குத்தி எழுதுகிறேன்,
தவறு உன்னுடையது அல்ல என்று தெரிந்தும்,
உன்னைத்தான் கிழித்து குப்பையில் எறிகிறேன்!

மறுபடியும் எழுதுகிறேன்,
உன்னை மையால் நிரப்பிக் கொள்கிறாய்!

சுவைத்து பக்கத்தில் வைத்த காபி கவிழ,
அதையும் உறிஞ்சிக் கொள்கிறாய்!
குப்பையில் எறிகிறேன்,
இம்முறையும் உன் தவறு இல்லை!

எங்கள் ஊரில் மின்வெட்டு உண்டு,
உன் மேல் விழும்
பேனா மையும், என் வியர்வை துளியும்
இணைபிரியா நண்பர்கள்!
இரண்டையும் உறுஞ்சுகிராய்!
வட்டமாய் நனைந்த புள்ளிகளை,
என் கண்ணீர் என்று
அவள் தவறாக நினைத்துவிட்டால்?
காதல் கடிதம் அல்லவா?!
மறுபடியும் உன்னை கு

மேலும்

உங்கள் வாழ்த்துக்கள் அனைத்தையும் ஊக்கமாய் ஏற்று மகிழ்கிறேன்! நன்றி நன்றி! 07-Jul-2017 11:01 am
செய்யாத தவறுக்கு எத்தனை முறை எறியப்படுவாய்.... எதார்த்தமான வரிகளாய் இருந்தாலும்...எவ்வளவு கருத்து நிறைந்தது .....வாழ்த்துக்கள்... 07-Jul-2017 10:26 am
நன்று 07-Jul-2017 10:15 am
சிறப்பு தொடரட்டும் கவிதைகள் வாழ்த்துக்கள் 06-Jul-2017 6:46 pm
ஒளி முருகவேள் - கதிர்நிலவன் நிலாரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2016 3:21 pm

ஏழு மணிக்கு எழு !

எட்டு மணிக்கு உண் !

ஒன்பது மணிக்கு ஓடு !

பகல் முழுதும் பணம்  தேடு !

இரவில் திரும்பு !

தொடு திரைகளிலும்
தொலைக் காட்சிகளிலும் 
தொலைந்து போ ! 

உண்டு
உறங்கி
விழித்து
மீண்டும்
மீண்டும் ஓடு !

சுயநலத்தில் சுருங்கிப் போ !

சக  மனிதனை மற!

அவலங்களை கண்டு அன்னியமாகு!

இப்படியே இயந்திரமாய் இயங்குகிற வாழ்க்கையில்...

இடையிடையில்

குற்ற உணர்வுகளுடன் 

உறுத்தல்களாய்

அவ்வப்போது  விழித்து கொள்கிறது 

மனதுக்குள்

மரத்துப் போன "மனிதம்" !

மேலும்

மிக்க நன்றி நண்பரே. 11-Oct-2016 2:40 pm
சுயநலத்தால் தாக்கப்பட்ட மனிதன் இன்று குணத்தில் சுருங்கிவிட்டான் கருத்துள்ள வரிகள் இன்னும் எழுதவும் 11-Oct-2016 12:46 pm
கடல் கடந்த வாழ்த்துக்களுக்கு நன்றி. 11-Oct-2016 9:42 am
அருமை! 11-Oct-2016 8:53 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
யாழ் கண்ணன்

யாழ் கண்ணன்

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
யாழ் கண்ணன்

யாழ் கண்ணன்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
யாழ் கண்ணன்

யாழ் கண்ணன்

திருச்சி
மேலே