கமலகர்த்திக் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கமலகர்த்திக் |
இடம் | : தென்காசி |
பிறந்த தேதி | : 09-Aug-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 66 |
புள்ளி | : 7 |
நடக்கும் கல்யாணத்தை
நம்பத் தயாராய் இல்லைதான்,
ஆயினும் வாழ்த்து மடல் எழுதி
தோற்றுக் கொண்டேயிருக்கிறேன்
வந்தின்னும் வரிகளுக்குள்
வாய்ப்பதாயில்லை
மழையில் நனையும் வெயில்
உலை கொதித்துக்கொண்டிருக்க
அரிசி தேடினேன் - நீயோ
அரிசியில் உயிர் (எழுத்து) எழுதி கல்வி
புகட்டிக்கொண்டிருந்தாய்!
அரசவை புலாவராகிவிட்டாய் - இனி நம்
வறுமை மாறிவிடும் என்றிருந்தேன் - நீயோ
அரசனைப் பகைத்துக்கொண்டு சிறை வாசம்
வாங்கி வந்தாய்!
மாணம் காக்க கிழிஞ்சல்கள் மறைத்த்தே சேலை
கட்டிக்கொண்டேன் - நீயோ முண்டாசுக் கவியாய்
மாணம் காத்தாய்!
பசித்திருக்கும் நம் குழந்தைக்காக இரவல் வாங்கிய
அரிசியை பறவைகள் பசிக்கு விருந்தாக்கினாய்!
பசியால் வாடும் நம் குழந்தையின் தாயாய் நான் வாட
முப்பது கோடி குழந்தைகளின் தாயையே எண்ணி நீ வாடினாய்!
நான், எனது என்று நான் இருக்க
நாம், நம் நாடு என்று தேசப்பற்ற
கண்ணன் நான்.....
இரு இதழ்கள் கொண்ட உன் கீதையில்
முதல் வரி முதல் கடை வரி வரை
என் முகவரி தொலைத்த கண்ணன் நான்...
இவன்
நா. கமலகார்த்திக்.
கருப்பு நிலா கண்டேன் - உன் கண் எனும் வெண் வானில்!
அந்த நிலவிலே ஏதோ ஓர் உருவம் தெரியுமாம்!
என் நிலவிலே உன் உருவம் மட்டுமே தெரிய வேண்டும்
உன் நிலவிலே என் உருவம் மட்டுமே தெரிய வேண்டும்
விழி திறந்து விழித்திருப்போம்
எவர் விழித்தாலும் கேட்காத அளவிற்கு...
கருப்பு நிலா கண்டேன் - உன் கண் எனும் வெண் வானில்!
அந்த நிலவிலே ஏதோ ஓர் உருவம் தெரியுமாம்!
என் நிலவிலே உன் உருவம் மட்டுமே தெரிய வேண்டும்
உன் நிலவிலே என் உருவம் மட்டுமே தெரிய வேண்டும்
விழி திறந்து விழித்திருப்போம்
எவர் விழித்தாலும் கேட்காத அளவிற்கு...
ஊடுருவும் கண்ணாடியாய் இருந்த என் மனதில் - பின்னால் முலாமிட்டு, முன்னால் உன் முகமிட்டாய்
பிம்பத்துடன் பந்தம் கொண்டே உன்னுடன் வாழ்கிறேன் நான்....