அய்யம் பெருமாள் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அய்யம் பெருமாள்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  10-Sep-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Nov-2014
பார்த்தவர்கள்:  148
புள்ளி:  21

என்னைப் பற்றி...

கவிதைகளால் காலம் கடக்க போராடும் போராளி இவன் கவிஞன் உளி!!!

என் படைப்புகள்
அய்யம் பெருமாள் செய்திகள்
அய்யம் பெருமாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2016 9:15 pm

என்னில் ஏதோ ஒன்றை தொலைத்த நேரம் என்னுள் நுழைந்தவள்!!!
நான் விழித்த நேரம் என்னில் முற்றிலும் பரவியிருந்தாள்!!!
இழுத்தெறிந்தேன்!!!
என் இதயம் கிழித்தாள்!!!
அறுக்க எண்ணினால், என்னை துளைத்துக் கொண்டிருந்தாள்!!!
கதறி அழுதேன்!!!
ஆனால் அவள் அழகாய் சிரித்தாள்!!!
ஓடிச்சென்றால் என் கால்கள் கட்டிக்கொண்டாள்!!!
தவழ நினைத்தால் என் நிழலலையும் நெருங்கவிட மறுத்தாள்!!!
வழியின்றி மயங்கி விழுந்தேன்!!!
தாவித்தாங்கிப்பிடித்து, தாழாட்டினாள்!!!
யாரென புரியாது பயத்தோடு கேட்டேன்!!!
அழுதுக்கொண்டே முற்றிலும் மறைந்தாள்!!!
அவள் இருக்கும்வரை வலியில் அழுதநான்!!!
அவளை இழந்தப்பின்பு, அவ்வலிக்காக ஏங்கி நிற்கிறேன்!!

மேலும்

காதலின் விந்தைக்குள் நுழைந்தால் காலமும் பலருக்கு வரமாகிவிடும் சிலருக்கு சாபமாகிவிடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Feb-2016 3:06 pm
அய்யம் பெருமாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2016 11:37 am

தனிமையைத் தேடி!!!
கடற்கரை சென்றேன்!!!
அலைகள் அரவனைத்தன!!!
காடுகள் சென்றேன்!!!
பறவைகள் நலம் விசாரித்தன!!!
மண்ணை பார்தேன்!!!
விதைகள் கைக்கொடுத்தன!!!
விண்ணை பார்த்தேன்!!!
நட்சத்திரங்கள் கண் இமைத்தன!!!
தினம் பச்சிலங்குழந்தைகள் தத்தித்தவழ்கின்றன!!!
தளிரெனும் பெயரோடு செடிகளில்!!!
எப்படி சொல்லிட முடியும் நம் உலகை???
வெறும் அழகென ஒற்றைப்பதத்தில்!!!

மேலும்

அய்யம் பெருமாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2016 9:02 am

வெற்றிடமாய் பரவிய எனக்குள்!!!
ஓராயிரம் சிந்தனைகளை உலாவ விட்டுவிட்டாள்!!!
அமைதியை தேடினேன், அவள் கயல் கண்கள் அனுப்பிவைத்தாள்!!!
வானத்து நிலவினை தேடிய எனக்குள், அவள் நினைவுகளை பறக்கவிட்டாள்!!!
தென்றலுக்கு காத்துக்கிடந்தால்,
அவள் சுவாசம் மட்டும் அனுப்பி வைத்தாள்!!!
காதல் குழிக்குள் தத்தளித்தேன்,
இன்னும் ஆழ் செல்ல அவள் கார்கூந்தல் அனுப்பி வைத்தாள்!!!
கவலையெல்லாம் நான் மறக்க, பாதக்கொலுசினில் இசைஇசைத்தாள்!!!
இப்பூமி பந்தில் நான் வாழ, அவள் பாதம் தொட்டே சொர்கம் படைத்தாள்!!!
அவள் உண்ட உணவு செறித்திட, என் கைகோர்த்து உலா வந்தாள்!!!
தன் தந்தையிவன் சிரித்தாட தன் உலகம் எங்கும் செப்பனிட்டாள்!!!

மேலும்

அய்யம் பெருமாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2016 5:22 pm

வாழ்ந்து வீழும் மனிதனை!!!
வீழ்ந்தும் வாழவைக்கின்றன!!!
மரங்கள்!!!

மேலும்

அய்யம் பெருமாள் - அர்ஷத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2015 12:43 pm

கைநழுவி
தவறி விழுந்த
நாழிகையில்
தெறிக்குது
கண்ணீர் துளிகள்
‪#‎பிரிவு‬

கொஞ்சம்
கோபமாய்
உறவாடிவிட்டேன்
கிள்ளிவிட்டால் கள்ளி
#குண்டூசி

பல
மலடித்தாய்கள்
இன்று நிறைமாத
கர்பிணிகள்
#அடைமழையில் குளங்கள்

பலர்முகம்
பார்த்துக்கொண்டிருந்த
குளத்தில் நானும் விளிம்பில்
நின்று கொண்டிருந்தேன்
பின்னிருந்த எவனோ
தள்ளிவிட்டான்
பாவி தத்தளித்துகொண்டிருக்கிறேன்
மீளாமல்
#காதல்

பிறவி
குருடு
#சட்டம்

இதன்பின்
வாழ்க்கை
என்னவாகுமோ
ஏதாகுமோ
என்ற அச்சத்திலே
கட்டி கொடுக்கிறார்கள்
#தேர்வு தாள்

அறிவுக்கனியை
நான் பறிக்க
வளைந்து
கொடுக்கும்
ஞான மரங்கள்
#ஆசிரி

மேலும்

நன்றிகள் நண்பரே 08-Feb-2016 2:50 pm
அருமை தோழர் 05-Feb-2016 9:25 am
நன்றிகள் நண்பா வருகையில் மகிழ்ச்சி ... 08-Dec-2015 2:44 pm
அருமை கற்பனை தோழா 08-Dec-2015 12:44 pm
அய்யம் பெருமாள் - அய்யம் பெருமாள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2014 2:37 pm

பணங்களுக்கு கூட இனி expiry date வேண்டும்!!!
மூடிக்கிடப்பவை எல்லாம் அழுகி போக!!!

மேலும்

அய்யம் பெருமாள் - அய்யம் பெருமாள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2014 2:40 pm

செல்ல வழியேயில்லை என அழுவோர்க்கு மத்தியில்!!!
செல்ல தங்களையே வழியாக்கும் சில அற்புதமக்கள்!!!
தியாகிகள்!!!

மேலும்

அய்யம் பெருமாள் - அய்யம் பெருமாள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2014 2:44 pm

அவன் பெரியவனாகிவிட்டான்!!!
என்னை பத்திரமாக பார்த்துகொள்கிறான்!!!
முதியோர் இல்லத்தில்!!!

மேலும்

அய்யம் பெருமாள் - அய்யம் பெருமாள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2014 2:51 pm

உனக்கான எல்லா வழிகளும் மூடப்பட்டுவிட்டனவா???
மகிழ்ந்துகொள்!!!
புதுவழிகள் பிறக்க போகின்றன என!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே