ஹைக்கூ

கைநழுவி
தவறி விழுந்த
நாழிகையில்
தெறிக்குது
கண்ணீர் துளிகள்
‪#‎பிரிவு‬

கொஞ்சம்
கோபமாய்
உறவாடிவிட்டேன்
கிள்ளிவிட்டால் கள்ளி
#குண்டூசி

பல
மலடித்தாய்கள்
இன்று நிறைமாத
கர்பிணிகள்
#அடைமழையில் குளங்கள்

பலர்முகம்
பார்த்துக்கொண்டிருந்த
குளத்தில் நானும் விளிம்பில்
நின்று கொண்டிருந்தேன்
பின்னிருந்த எவனோ
தள்ளிவிட்டான்
பாவி தத்தளித்துகொண்டிருக்கிறேன்
மீளாமல்
#காதல்

பிறவி
குருடு
#சட்டம்

இதன்பின்
வாழ்க்கை
என்னவாகுமோ
ஏதாகுமோ
என்ற அச்சத்திலே
கட்டி கொடுக்கிறார்கள்
#தேர்வு தாள்

அறிவுக்கனியை
நான் பறிக்க
வளைந்து
கொடுக்கும்
ஞான மரங்கள்
#ஆசிரியர்கள்

எழுதியவர் : அர்ஷத் (28-Nov-15, 12:43 pm)
Tanglish : haikkoo
பார்வை : 245

மேலே