மதன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மதன் |
இடம் | : |
பிறந்த தேதி | : 11-Jan-1903 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 4 |
இயற்கையின் அழகை மட்டும் ரசித்து போகையில்
அவற்றின் மீதும் அனுதாபம் காட்ட
இவற்றை படைத்தனவோ,
மார்கழி குளிரில் மரத்தின் கீழ் உறங்கும் சிறுமி
அப்பாவின் இதய சூட்டில் இடம் தேடுகிறாள்
படிக்க இடம் தராத பள்ளி வாசல்
படுக்கவும் வழி விடாத
பூட்டிய கதவுகளுக்கு வெளியே
இருந்தும் தன்னை மறந்தே உறங்குகிறாள்
இது உழைப்பின் உடல் வலியோ - இல்லை
உணர்வின் உயிர் வலியோ யாரறிவர் .............
பல்லவி எல்லாம் பழகி போய்
சரணம் ஏனோ சலித்து போனதடி ..!!
கவிதை தாளும் கசங்கி போய்
எழுதும் மையும் தீர்ந்து போனதடி ..!!
நிமிடம் சற்று நின்று போய்
நொடியும் அதிலே நொந்து போனதடி ...!!
பாதை எல்லாம் மறந்து போய்
பயணம் இன்றே நின்று போனதடி ..!!
ஏக்கம் எல்லாம் ஓய்ந்து போய்
ஆக்கம் அதிலே புதைந்து போனதடி ...!!
நிழலும் இங்கே மறைந்து போய்
நிஜமும் எங்கோ தொலைந்து போனதடி ..!!
வெற்றி எல்லாம் விலகி போய்
தோல்வி மட்டுமே தோழன் ஆனதடி ..!!
ஆசை எல்லாம் அடங்கி போய்
அன்பும் அதிலே அழிந்து போனதடி ..!!
இமைகள் இரண்டும் எரிந்து போய்
விழிகள் இங்கே வெந்து போனதடி ..!!
சுவாசம் கூட சுருங்கி ப
முதுகெலும்பை வில்லாய் வளைத்த முதுமை
முதுகில் ஏறிக்கொண்டு
உடல் மொழியில் தோற்று போன யவரிடமும் ,
பாதையிலோ பயணத்திலோ வழி விட தோன்றாத நமக்கு
நாளைய மூப்பு நினைவிருப்பதில்லை...
உனக்கான தனிமையின் காத்திருப்பு
சுகமென்று அறிந்தேனடா
பாழாய் போன இந்த பகல் யாவும்
அழுக்கான உன் ஆடைகளுடனும்
எனக்கான தீராத உன் கவிதைகளுடனும்
தொலைந்து போனது
நீ வரும் நேரம் வந்த போதும்
வீடு வரை தாங்காத என் தவிப்பிற்கு
உன்னுருவம் வீதி முனை தெரிவது எப்போது
வா வாசல் வரை காத்திருக்கிறேன்....
வரலாற்றை தோற்கடிக்கும் வரலாறு கொண்டவை
நான்கு திசைகளும் பரவி நாட்டின் எல்லைகள் வகுப்பவை
சரித்திரத்தில் சாட்சிகள் இல்லா பல காட்சிகள் மாற்றியவை
இவற்றின் வற்றிய கரைகள் தான் மனிதன்
தனதென வாழ்பவை
எண்ணிலடங்கா உயிர்களின் பிறப்பும் மறிப்பும்
இங்கு இயல்பாய் நிகழ்பவை
இது பிரபஞ்ச கூட்டில் வேறெங்கும் நிகழாதவை
நல்ல வளங்கள் தந்து நாட்டின் வாணிபம் வளர்பவை
சில நேரம் தன்னுள் முழ்கடித்து இருந்த இடம் தெரியாது அழிப்பவை
இயற்கையின் அதிசயங்களில் இவை அளவில்லா அழகிவை
இதுவே ஆக்ரோஷம் கொண்டு பல சுனாமி விடுதிகள் தந்தவை
நல்ல நிலவின் முழுமையில் வீசிடும் பேரலை
இந்த உலகம் உயிர்ப்புடன் இயங்கிட ஓ