நினைவில் நில்லாமல் நீ வந்தே - நிலவாய் அருகே நிற்கிறாய்
பல்லவி எல்லாம் பழகி போய்
சரணம் ஏனோ சலித்து போனதடி ..!!
கவிதை தாளும் கசங்கி போய்
எழுதும் மையும் தீர்ந்து போனதடி ..!!
நிமிடம் சற்று நின்று போய்
நொடியும் அதிலே நொந்து போனதடி ...!!
பாதை எல்லாம் மறந்து போய்
பயணம் இன்றே நின்று போனதடி ..!!
ஏக்கம் எல்லாம் ஓய்ந்து போய்
ஆக்கம் அதிலே புதைந்து போனதடி ...!!
நிழலும் இங்கே மறைந்து போய்
நிஜமும் எங்கோ தொலைந்து போனதடி ..!!
வெற்றி எல்லாம் விலகி போய்
தோல்வி மட்டுமே தோழன் ஆனதடி ..!!
ஆசை எல்லாம் அடங்கி போய்
அன்பும் அதிலே அழிந்து போனதடி ..!!
இமைகள் இரண்டும் எரிந்து போய்
விழிகள் இங்கே வெந்து போனதடி ..!!
சுவாசம் கூட சுருங்கி போய்
இதய துடிப்பும் நின்று போனதடி ..!!
உணர்வும் இங்கே மடிந்து போய்
உயிரும் எங்கோ ஓடி போனதடி -- ஆனால்
நினைவில் நில்லாமல் நீ வந்து
நிலவாய் அருகில் நிற்கிறாய் ...!!
கனவில் வாழும் என் மொழியே
காதலும் இங்கே ஒரு வலியே ..!!
கவிதை தந்தாய் அதன் வழியே
உனையே எழுதுது என் மதியே...!!
--அன்புடன் இராஜ்குமார் ...