GEEKAYSON - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : GEEKAYSON |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 0 |
எங்கே எங்கள் அஞ்சல் அட்டை.??.
==============================
கொஞ்சலாய் வரும் அஞ்சல்
சிணுங்கலாய் வரும் அஞ்சல்
கூப்பாடாய் சில அஞ்சல்
பாடி அழைக்கும் சில அஞ்சல்
பெயரினை சொல்லி அழைக்கும் சில அஞ்சல்
துள்ளி குதிக்கும் சில அஞ்சல்
அழைப்பதுவும் பல விதத்தில்
அவரவர் விருப்பம்போல்!!!
கண் சிமிட்டும் நேரத்தில்
கையடக்க தபால் பெட்டியில்
அலைபேசி தபால்காரர்
கணக்கில்லாமல் தரும் அஞ்சல்!!!
அஞ்சல் அட்டை
பாட்டிசைக்குமா??
இனிய மொழியில்தான்
செய்திகளை உடன் தருமா??
அஞ்சல் அட்டை
குரல் தருமா??
"இச்" என்ற முத்தத்தை
சத்தத்தில் தந்திடுமா??
செய்திகளை அஞ்சல் அட்டை
மஞ்சத்தில் அளித்திடுமா
கொடுக
ஏறி மிதித்தாலும்
வீர நடை போடுகிறது
செருப்பு
கடித்துவிட்டு
கண்ணீர் விடுகிறோம்
பச்சை மிளகாய்
தோற்றம் ஜனவரி 1
மறைவு டிசம்பர் 31
நாட்காட்டி
அடித்து பிழிந்தாலும்
மானம் காக்கிறது
ஆடை
கடல்
கரை ஏற விடுவதில்லை
அலைகள்
புதைத்தாலும்
உயிர்க்கிறது
விதை
அத்திப் பூக்களை இடம் பெயர்க்கும் நித்திய
=========================================
மல்லிகள்....
=========
சாய வெளுப்புகள்
அகமும் புறமுமாய்..
திரும்பும் திசைகளிலெல்லாம்...
எங்கெங்குமாய்....
தேன் தடவிய விடங்கள்
உண்ண வைத்து
கொல்லப் பார்க்கும்
வித்தை கற்றவர்களாய்...
நிழல் தருமென்று
ஒதுங்கி நின்றவர்களுக்கு
நெருஞ்சி கிரீடங்கள்
மலர் மகுடங்களாய்....
வெந்த புண்ணில்
வேல் பாய்ச்சி துடிக்க வைத்து
எக்காளச் சிரிப்பில்
ஆத்ம திருப்திகளாய்....
அமிலத்தில் ஆராதனைகள்
ரணகள அவதி கண்டு
மானுட ரசனைகள்
இதயங்கள் வரைபடங்களாய்....
பாம்பும் பல்லியும்
விடமிழந்து போகும்
மு
மனிதம் எமனிடத்தில் மட்டும்...
===============================
அசுரவேகப் பயணத்தில்
தூக்கி எறியப்பட்ட ஒருவன்
குருதி கொட்டியும்
உடல் துடித்தும்.....
அசைவற்றவனாய்...
சுற்றி கூட்டமாய் மக்கள்
காற்றினை மறைத்துக் கொண்டு
மக்களா?? மாக்களா??
மனிதாபத்துடன் ஒருவன்
உயிர் இருக்கிறதா??
தொட்டுப் பார்க்கிறான்
மணிக்கட்டின் துடிப்பை
துடிப்பை அறிந்தானோ இல்லை
துடித்துக் கொண்டிருந்த
மணிக்கட்டின் கடிகாரம் அறிந்தான்
இனி அது அவன் உடைமையாய்.....
இதயத் துடிப்பை
அறிந்து சொல்வதாய் ஒருவன்
சட்டைப் பையின் பணத்தோடு
சற்றும் இரக்கமின்றி.....
இதயத் துடிப்பை அறிந்தானோ இல்லை
இருக்க