கொற்றன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : கொற்றன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Jul-2020 |
பார்த்தவர்கள் | : 162 |
புள்ளி | : 14 |
கன்று நாட்டியதும்
கொட்டத் தொடங்குகிறது
கடலில் மழை.
மனித ரற்றவர் மத்தியில் நிற்பினும்
மனித னாயுனை மாத்திரம் மக்களும்
தனிமை யாகவே தானறி வாரெனில்
தலைவ ணங்குதல் தானுனை யேயொரு
புனித னாக்கிடும். பூமியும் போற்றிடும்.
புடமு மிட்டுனைப் பொன்னென மாற்றிடும்.
இனிய வார்த்தைகள் இன்னிசை மாமழை
இதழில் பெய்யுமுன் இன்செயல் வாழுமே
யாரையும் பழிக்காதே வெறுக்காதே துதிக்காதே
ஆற்றல் மிக்கோர் என்பாரின் அறிவைப்பார்
அவர் கொண்ட அறிவை மிஞ்ச செயல்படு
தேடு நுண்ணியமாய் அறிந்து தெளி வலிமையாய்
அறிவை விட உயர்ந்த ஆயுதமில்லை உலகில்
இகழ்ந்தோர் எதிரில் அறிவால் சிறந்து எழுந்துநில்
ஆயுதங்கொண்டு ஆர்ப்பரிக்காதே திரும்பி தாக்கும்
ஆயுதம் எளிதில் இடமாறும் ஆனால் அறிவு பயங்காட்டும்
அரசின் தளர்வால் வென்றாலும் தேடி அறிவு கொள்
நியாயத்தை எதற்காகவும் நொடி பொழுதும் சிதைக்காதே
சிதைந்த நியாயம் நேர்ப்பட பற்பல ஆண்டுகள் ஆகும்
இணையாய் எவற்றையும் பார் கர்வம் கொள்ளாதே
பூடகங்கள் நிறைந்தது தமிழ் இலக்கண இலக்கியங்கள்
புலப்பட்டுத் தெளிந்தால் தெளிந்தோ
கண்கள் மூடியும் கதறல் காதுகள் குடையும்
கண்ணீர் குருதியாய் உடலினை மெழுகும்
கனவுகள் தோறும் நிணங்கள் மலியும்
நனவுகள் தோறும் நடக்கும் கால்களை பிணங்களிடரும்
புலரிகள் தோறும் வன்புணர்சசியின் வீச்சம்
விடியல் வெட்டம் என்றும் செங்குருதியின் மூட்டம்
வன்மம் வற்ற வற்ற வயிறு நிறைய தீனிப்போட்ட துவக்கொலி
பாறைநெஞ்சு பஞ்சாய் இளகியப்பின்னே
தீனியாய் தின்ன என்னைத் தீயாய் துரத்துதே
துவக்கொலி திகட்டியப்பின்னே
துளங்கிய தூண்டா மெய் விளக்கின் துண்டு கீற்று
துவக்கினும் ஆழத்துளைத்து தூக்கம் கிழிக்குது
எஞ்சிய கந்தல் துஞ்சத்தின் கனவுகளில் கண்ணீரும் கம்பலையுமே
திகட்டிய துவக்கொலி நிற்காது துரத்த
உள்ளம் துவள உண
தேன் தித்திப்பாய் இனிக்கும் தேசியமெனும் தேறல்
திகட்ட திகட்ட குடித்தால்
தான் வாழ யாரையும் கொல்லும் நஞ்சாய் திரியும்
மதப்பேற ஏற மரமாய் மரத்து மனம்
மன்பதை மடிவதில் திளைக்கும்
அனைவரும் நிகரே எனும் அறிவு அவிஞ்சு
தானே உயர்வெனும் தற்பிடித்தம் தழைக்கும்
எல்லைகள் எழுதி தொல்லைகள் வளர்க்கும்
தேன் இனிப்பாய் இனித்தாலும்
தேள் கொடுக்கே தேசியமெனும் தேறல்
கார்முகில் கால் கொண்டு
தரையில் நடப்பது போல்
போர் முரசொலியாய் பிளிறும் களிறே
ஞாயிறின் கதிர்களும் அடி தொடா
அடரிருள் அடவியில் தும்பிக்கை தூரிகையால்
காட்டைப் புனையும் கண்ணெழுத்து கலைஞர்களே
காலங்காலமாய் அடியடியாய் குடிகுடியாய்
தம் வங்கை வரைந்த வழிகளை மறவா
குடி மூத்தோள் நடத்திடும் குன்றுகள் கூட்டமே
அருகும் காட்டின் காலச்சருகுகளே
பெருகும் கட்டிட களைகள் அறுத்திடும்
வழிவழி மறவா வலசை வழிகள்
கூரிருள் காட்டைக் குடையும் குன்றுகள் தாமே
காட்டைத் தின்னும் மனுசப் பசிக்கு
முதல் படையல் ஏனோ
புத்தன் பெத்தெடுத்த அரசமரத்தடியிலே
அவுஞ்ச அறிவயெல்லாம் பத்த வைக்கும்
கல்வி கங்கெனவே
ஆளுயர சிலயொன்னு நிக்குதய்யா
முன்னத்தி தேராக
மலையுச்சி ஊத்தாக
மதிலேற கயிறாக
முன்னேற வழிகாட்டி
ஆள்காட்டி விரல் நீட்டி
ஆளுயர சிலையொன்னு நிக்குதய்யா
அடிமை ஆளுனக்கு
உடமையில் பங்கு எதுக்கு
காலுல பிறந்த உனக்கு
கல்வியின் பயன் எதுக்கு
என இல்லா இட்டுகட்டி
இதிகாசக்கதகட்டி
கயமை பேசின கயவரைரெல்லாம்
கல்வியாலே கதறடிச்சு
சட்டத்தால் கொட்டமடக்கி
கையில் நூல் ஏந்தி
ஆளுயர சிலயொன்னு நிக்குதய்யா
வண்ணம் ஆறுந் தொலச்சு
வான் எங்கும் நீலம் நிலச்சாப்போல
வர்ணம் நாலுந் தொலச்சு
வழிவந்த சாதி புதைச்சு
ஊருஞ்சேரியும் இ
மடியில் தவழ்ந்து முலைப்பாலுக்கு முண்டும்
பஞ்சு மகவின் மழலை மஞ்சில் நனையும் நேரம்
பேறு கால பெரு வலியோ
உற்றவனின் குறுக்குபுத்தியின் சுருக்கு பேச்சோ
அவனை பெற்றவளின் பொறுக்க இயலா கருக்கு ஏச்சோ
பெற்றவளை காணா புலம்பின் புழுக்கமோ
எதுவோ எல்லாம் நொடியில் மாயும்
இவை இன்னல் இம்மி நேரம் இல்லாமல் இருக்கவே
அனிச்ச வாயால் அவள் பிள்ளை முலைக்காம்பு மீட்ட
அலையலையாய் அவளுள் ஆக்சிடோசின் சுரக்குது போலும்
புத்தன் பெத்தெடுத்த அரசமரத்தடியிலே
அவுஞ்ச அறிவயெல்லாம் பத்த வைக்கும்
கல்வி கங்கெனவே
ஆளுயர சிலயொன்னு நிக்குதய்யா
முன்னத்தி தேராக
மலையுச்சி ஊத்தாக
மதிலேற கயிறாக
முன்னேற வழிகாட்டி
ஆள்காட்டி விரல் நீட்டி
ஆளுயர சிலையொன்னு நிக்குதய்யா
அடிமை ஆளுனக்கு
உடமையில் பங்கு எதுக்கு
காலுல பிறந்த உனக்கு
கல்வியின் பயன் எதுக்கு
என இல்லா இட்டுகட்டி
இதிகாசக்கதகட்டி
கயமை பேசின கயவரைரெல்லாம்
கல்வியாலே கதறடிச்சு
சட்டத்தால் கொட்டமடக்கி
கையில் நூல் ஏந்தி
ஆளுயர சிலயொன்னு நிக்குதய்யா
வண்ணம் ஆறுந் தொலச்சு
வான் எங்கும் நீலம் நிலச்சாப்போல
வர்ணம் நாலுந் தொலச்சு
வழிவந்த சாதி புதைச்சு
ஊருஞ்சேரியும் இ