கார்த்திகேயன் ஆறுமுகம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கார்த்திகேயன் ஆறுமுகம் |
இடம் | : சேலம்,தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 19-Jul-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 98 |
புள்ளி | : 6 |
பயணம் தொடங்குகிறது ...
உயிர் அழும். மனம் வலிக்கும்.
கல்லறை திசை தேடி
கால் நடக்கும்.
தூக்குக் கயிறு, விஷப்புட்டி
கடல், மலையுச்சி
மரணத்தின் விலாசம் தேடும்
நிராகரிக்கப்பட்ட நேசம்...
நில்.
நின்று ஒரு நிமிடம்
நிறுத்தி மூச்சு விடு.
செத்துவிட்டால் தீர்ந்திடுமா?
முன்னே பின்னே செத்திருக்கிறாயா?
செத்தால் செத்ததுதான்!
அந்த ஏழைச் சிறுமி பள்ளி செல்ல
எப்படி தானம் செய்வாய்
செத்துவிட்ட நீ?
அவள் படித்திருந்தால்
அவளின் பரம்பரைக்கே
பட்டினி இருந்திருக்காது தெரியுமா?
நீ தினம் செல்கிற
சாலையைக் கடக்க விழையும்
அந்த குருடருக்கு உதவ
நீ வேண்டாமா?
தாய் அழுகை துடைக்க வேண்டாம்
தந்தை கனவை செதுக்க வேண்டாம்
உ
முட்டிமோதடா முட்டிமொதடா
முளைத்துவிட்டால் மரமாகிவிடு
முடிந்துவிட்டால் உரமாகிவிடு
விதைப்பவன் யாரோ
விதிப்பவன் யாரோ
முயல்வது மட்டுமே
உன்னால் முடிந்தது...
- கார்த்திகேயன் ஆறுமுகம்
என் வாழ்க்கையில்
ஒரு போட்டி என்றால்
நெஞ்சை நிமிர்த்தி
வென்றிடுவேன்
உள்ளே வாழ்வது நீதானே...
எதிராளி நானென
போட்டியாக நீ வந்தால்
மண்டியிட்டு ஒப்புக்கொள்வேன்
தோல்வியையும்
வாழ்வது என் உயிர் தானே...
வெண்ணிலா வாழவே
கதிரவனும் மறைந்துவிடுகையில்..
தவறொன்றுமில்லையடி
என் நிலா வாழவே
நானும்........
தேடித் தொலைகிற
வாழ்க்கையில்
தொலைத்ததையும்
தேடுகிறேன்...
சாதிகள் இல்லையடி
நம் பாரதி சொன்னாரடி
அதன் பின்பால் பொருள் மட்டும்
அறிந்திருந்தேனடி - மூடன்
பெண்பால் பெயரெச்சம்
அறியும்படி செய்தாயடி ....