லெனின் கேசவன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : லெனின் கேசவன் |
இடம் | : ஆத்தூர் - சேலம் |
பிறந்த தேதி | : 23-May-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 87 |
புள்ளி | : 12 |
திருச்சி தேசியக்கல்லூரியில் எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., பட்டம் பயின்றேன். பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு வென்றிருக்கிறேன். தமிழ் மீது தீராத பற்றுடையவன். தற்போது ஒரு கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.
பழுத்தப் பழம் அழகாயிருக்கும்
பயன்படாது யாருக்கும்!
மரத்தில் மூப்பு எட்டி
மரணத்தை தொட்டு நிற்கும்!
விவரம் தெரிந்த நாளில்
உதட்டு எச்சில் காய்ந்து
அம்மா என அழுகையில்…
அநாதையாய் உணர்ந்தேன்!
சொல்லி அழ யாருமில்லை
சொந்த பந்தங்களும் கூட இல்லை!
ஒருநாள்
ஒற்றைச் சடையில் அழகாய் இருந்தாய்…
ஓரக்கண்காட்டி – உன்னை
ஒருத்திக்கு மட்டுமே நானென,
உறவாட வந்தானே… தெரிந்த
ஊர்க்காரி சொன்னாளே!
கருவாய் வயிற்றில்
உருவாய் எனைக்கொடுத்து
ஊர்வம்பு பேசிடவும் ஏசிடவும்
ஓடினானே! என் அப்பன் ஓடினானே!!
மானம் காத்திட
மசக்கையை மறந்து
துரத்தி அடித்தனரே… உன் பெற்றோர்கள்
துரத்தி அடித்தனரே..!
தனியாய்
பழுத்தப் பழம் அழகாயிருக்கும்
பயன்படாது யாருக்கும்!
மரத்தில் மூப்பு எட்டி
மரணத்தை தொட்டு நிற்கும்!
விவரம் தெரிந்த நாளில்
உதட்டு எச்சில் காய்ந்து
அம்மா என அழுகையில்…
அநாதையாய் உணர்ந்தேன்!
சொல்லி அழ யாருமில்லை
சொந்த பந்தங்களும் கூட இல்லை!
ஒருநாள்
ஒற்றைச் சடையில் அழகாய் இருந்தாய்…
ஓரக்கண்காட்டி – உன்னை
ஒருத்திக்கு மட்டுமே நானென,
உறவாட வந்தானே… தெரிந்த
ஊர்க்காரி சொன்னாளே!
கருவாய் வயிற்றில்
உருவாய் எனைக்கொடுத்து
ஊர்வம்பு பேசிடவும் ஏசிடவும்
ஓடினானே! என் அப்பன் ஓடினானே!!
மானம் காத்திட
மசக்கையை மறந்து
துரத்தி அடித்தனரே… உன் பெற்றோர்கள்
துரத்தி அடித்தனரே..!
தனியாய்
கண்ணைச் சிமிட்டி
கைக்கால்களைத் தாளமிட்டு
பெண் பிறப்பாய்...
இவ்வுலகில்
அம்மாவின்
முந்தானையைப் பிடித்துக்கொண்டு
அழும் குழந்தையாய்...
அப்பாவின்
சுண்டு விரலை
இறுக்கிப் பிடித்து,
பள்ளிக்குச் செல்லும்
சிறுமியாய்...
அம்மாவுடன் சண்டை
தம்பியுடன் சச்சரவு
அப்பாவுடன் சமாதானம்
விவரம் தெரிந்த
விளையாட்டுப் பிள்ளையாய்...
கல்யாணம்!
பெண்களுக்கே உரியப் புதுப்பொழிவு!
கண்களில் சிரிப்பும்
உதட்டில் புன்னகையும்
கால் கட்டை விரல்
தரையில் கோலம் போடுவதுமாய்...
பெண்ணாகப் பிறந்தவளுக்கு
பிள்ளைப்பேறு...
உண்மையின் விளக்காய்...
குடும்பச் சுமைகளை
உள்ளங்கையில் தாங்கிய
இல்லத்தரசியாய்...
விடியலைத் தேடுகிறேன்!
பொழுது புலர்ந்து விட்டது
விடியலை – இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறேன்..!
சாலையோரத்தில்
அம்மா பிச்சைப் போடு
என் காதுகளில் ரீங்காரம்…
விடியலைத் தேடுகிறேன்..!
குட்டிச் சுவரில்
வேலையில்லாப் பட்டதாரிகள்…
விடியலைத் தேடுகிறேன்..!
பூங்காக்களில்
சிருங்கார ராஜாக்களாக
சோம்பேறிகள்!
விடியலைத் தேடுகிறேன்..!
குடிமகன்களின்
மகத்தான வெற்றிகளால்
வீதியிலேப் பிள்ளைகள்..
விடியலைத் தேடுகிறேன்..!
கல்வியை
வியாபாரம் செய்யும்
விகடகவிகள் பலபேர்…
படிப்பை அறியத் துடிக்கும்
பாமரச்சிறுவர்கள் - கன்னத்தில்
கைவைத்தபடியே…
விடியலைத் தேடுகிறேன்..!
குடும்பம் என்ற
கதம்பத்தி
விடியலைத் தேடுகிறேன்!
பொழுது புலர்ந்து விட்டது
விடியலை – இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறேன்..!
சாலையோரத்தில்
அம்மா பிச்சைப் போடு
என் காதுகளில் ரீங்காரம்…
விடியலைத் தேடுகிறேன்..!
குட்டிச் சுவரில்
வேலையில்லாப் பட்டதாரிகள்…
விடியலைத் தேடுகிறேன்..!
பூங்காக்களில்
சிருங்கார ராஜாக்களாக
சோம்பேறிகள்!
விடியலைத் தேடுகிறேன்..!
குடிமகன்களின்
மகத்தான வெற்றிகளால்
வீதியிலேப் பிள்ளைகள்..
விடியலைத் தேடுகிறேன்..!
கல்வியை
வியாபாரம் செய்யும்
விகடகவிகள் பலபேர்…
படிப்பை அறியத் துடிக்கும்
பாமரச்சிறுவர்கள் - கன்னத்தில்
கைவைத்தபடியே…
விடியலைத் தேடுகிறேன்..!
குடும்பம் என்ற
கதம்பத்தி
என் கண்ணீர்த் துளியை
சிற்பங்களாக்கி
வடித்துக் காட்டினேன்
பொய்யென்றாய்!
கவலைச் சிறகுகளை
விரித்துக்கொண்டு துன்ப வானவெளியில்
வலம் வந்தேன்
வேஷம் என்றுரைத்தாய்..!
உன் விழிகளால்
மின்னல் வெட்டப்பட்டு
இறந்து போனேனே
கண்டு கொண்டாயா?
கல்நெஞ்சக்காரியே
என் கண்ணீரைப்
பருகத்தான்
காதல் வேடமிட்டாயோ..!
என் துடிப்பை
நிறுத்தி விட்டு
உன் பெயரைச்
சொல்ல இதயத்திற்குக்
கட்டளையிட்டேன்...
தவறா அது?
ஓ... காந்தப் பெண்ணே!
உன்னை நெருங்கத்தான் என்
பூ நெஞ்சை
இரும்பாக்கிக் கொண்டேன்...
ஆனால்,
நீ காந்தமல்ல
கருங்கல்லென்று
கற்றுக் கொடுத்து விட்டாய்...
அடி கள்ளியே!
என் இதயத்தை
களவாடி
காய
ஆயிரம் தேடி ஜீவன் போக
அன்பினின் காயம் நெஞ்சினிலில்...,
கற்றவன் போறான் வாழ்வை
அழிக்க,கல்லாதவான் போறான்
வாழ்வை தேடி....,
வழி அனுப்பு நேரத்தில் கண்கள்
தூவிடும் கண்ணீரை போல்
உலகில் எதுவும் புனிதமில்லை.
காதில் இசைக்கின்ற அம்மா
பாட்டு யார் மறப்பார்.
சின்னஞ்சிறு குழந்தை பாச
பார்வையினால் காலினை
கட்டி அணைக்கிறது.பாசமான
நெஞ்சம் கசிய கண்கள்
தூவலை மறைத்து பிள்ளை
தூக்கி இன்பமாய் பாடும் சோகப்பாட்டு
பணம் நிறைந்தாலும் புகழ்
இறைந்தாலும் அன்பான
மனையாளின் காதல் பாசத்தால்
பிசைந்து தரும் அன்னம் கிடைக்குமா?
நெஞ்சங்களே!ஏனிந்த வெளிநாடு
புன்னகை தவழ்ந்து
பதுமையாய் என் மகள்!
விரல் நுனிப்பிடித்து நடக்கையில்,
வழி முடிந்து விட்டதே அதற்குள்...
ஏக்கமாய் மனம் ஏங்கும்!
இன்னும் சிறு தொலைவிற்கு
பிஞ்சு விரல்கள் என் கையைப் பற்றாதோ?
புன்னகைத் தவழ செல்கிறாள்!
நான் பணிக்குச் செல்கையில்
நல்லன்போடு அப்பா என்பாள்!
குட்டித் தேவதையை
தோளுயரத் தூக்கிக் கொஞ்சுவேன்!
கன்னம் சிவக்கும்படி முத்தமிட்டு
கனியமுதாய் சிரிப்பாள்!
'இதான் உங்க ஊர்ல முத்தமா'
பொய்க்கோபம் காட்டவே,
அழுத்தமாய் இதழ்ப் பதித்து
எச்சிலாக்குவாள் என் கண்ணத்தில்!
செல்ல மகள் சிரிப்பைப் பார்க்க
சீக்கிரமாய் வீடு திரும்புவது வழக்கமாச்சு...
வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தத
புன்னகை தவழ்ந்து
பதுமையாய் என் மகள்!
விரல் நுனிப்பிடித்து நடக்கையில்,
வழி முடிந்து விட்டதே அதற்குள்...
ஏக்கமாய் மனம் ஏங்கும்!
இன்னும் சிறு தொலைவிற்கு
பிஞ்சு விரல்கள் என் கையைப் பற்றாதோ?
புன்னகைத் தவழ செல்கிறாள்!
நான் பணிக்குச் செல்கையில்
நல்லன்போடு அப்பா என்பாள்!
குட்டித் தேவதையை
தோளுயரத் தூக்கிக் கொஞ்சுவேன்!
கன்னம் சிவக்கும்படி முத்தமிட்டு
கனியமுதாய் சிரிப்பாள்!
'இதான் உங்க ஊர்ல முத்தமா'
பொய்க்கோபம் காட்டவே,
அழுத்தமாய் இதழ்ப் பதித்து
எச்சிலாக்குவாள் என் கண்ணத்தில்!
செல்ல மகள் சிரிப்பைப் பார்க்க
சீக்கிரமாய் வீடு திரும்புவது வழக்கமாச்சு...
வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தத
சுவற்றில் சாய்ந்து நிற்கின்றேன்
சுமை நிறைந்த மனதோடு!
சூன் மாதம் நீ வருவாய் என...
சூடி இருந்த மல்லிகையை
ஆளுயர கண்ணாடியில்,
அழகுப் பார்த்தேன்!
உன் நெஞ்சில் முகம் புதைத்து
என் நாசியில் வாசம் உணர்வது
எப்பொழுது?
போதும் என்னை விட்டுவிடு,
உன் அன்பு - என்னை
கொன்றது போதும்!
தின்றது போதும்!
இரவானால் உணர்ச்சிகளை பகைவர்களாக்கிப் போரிட்டு வாகைச் சூடுகின்றேன்!
என் உடம்பு கல்லல்ல...
உணர்ச்சி பிண்டம்தான்!
சக- கிளத்தி இராணுவத்தை விட்டுவிடு!
இல்ல கிளத்தி என்னோடு வாழ்ந்து விடு!
உனக்கு புண்ணியம் ஆகட்டும்,
என் மனமே தூது
உன் நினைப்பே எனது வாழ்வு!
இன்னும்
சுவற்றில் சாய்ந்து நிற்கின்றேன்
சுமை