மதியரசு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மதியரசு
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  22-May-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Aug-2018
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  2

என்னைப் பற்றி...

போராளி

என் படைப்புகள்
மதியரசு செய்திகள்
மதியரசு - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2018 4:07 pm

மலையாள தேசம்
மழையாலே சேதம் - மக்கள்
பிழையாலே நாசம்
கொலை செய்தது இயற்கை என இகழ்தல் தகுமோ?

பேய்மழை பெய்ததுவே இங்கு
பேரிடர் மூண்டதுவே
பேரணை நீரெல்லாம் பொங்கி
தெருக்களில் சூழ்ந்ததுவே

நிலம் அது சரிந்ததுவே
அகம் எல்லாம் புரண்டதுவே - மக்கள்
முகம் எல்லாம் கண்ணீர் மூடி
சுகம் எல்லாம் இருண்டதுவே

துளி மூச்சு விடாமல் அடக்கி வைத்திருந்த அணையெல்லாம்
அப்பாடா என பெருமூச்சு விட்டதனால் வந்த வினை
அங்குள்ள அன்பர்கள் அனைவருக்கும் ஆபத்து
ஆதரவாய் ஓடிவந்து கை நீட்டு

தமிழ் தாய் தவபுதல்வி வசிக்கின்ற வளநாடு
இறைவன் அவன் சொந்த திருநாடு
இன்று இயற்கை கட்டியதுவே இடர் கூடு
இதை மீட்க கைகோர்த்து ந

மேலும்

மதியரசு - சொ பாஸ்கரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Aug-2018 4:05 pm

திருநங்கை

ஆணும் பெண்ணும் கலந்த கலவை – இது
ஆண்மை குறைத்த ஆண்டவன் சலவை

முள்ளுள் மலரை மூழ்கச் செய்து - புது
மூன்றாம் பாலாய் செய்தான் கைது

நளினம் மிகுந்த நர்த்தனப் பிறவி - கவி
நயமிகுப் பேச்சால் கவரும் குலவி

கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது
கடவுள் தெரிந்தே செய்த கலப்படம்

கள்ளம் கபடம் இல்லா சிந்தை – இவர்
உள்ளம் எங்கும் கவலையின் மந்தை

முக்கனி மூன்றும் இணைந்த கலப்பு - இது
முன்னாள் தொட்டே தோன்றிய பிறப்பு

பாறையும் பூவும் கலந்த தேகம் - இது
பிரம்மன் செய்த

மேலும்

நன்றி 14-Sep-2018 11:53 am
வார்த்தைகள் , வரிகள் , கவிதை சுமந்த கரு ... அனைத்தும் அருமை . 31-Aug-2018 5:49 pm
அருமை ...அருமை ! மிக அருமை.கவிதை மிக அழகாக அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள். நான் மிகவும் இரசித்த வரிகள் ..., அல்லும் பகலும் இணைந்தால் அந்தி - இது அள்ளிப் புசித்திட இயலாப் பந்தி கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது கடவுள் தெரிந்தே செய்த கலப்படம் ...சூப்பர் !!! 31-Aug-2018 3:23 am
நன்றி 30-Aug-2018 6:46 pm
மதியரசு - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2018 3:56 pm

ஈர் எழுத்து இமையம்
கூர் எழுத்து புலவர்
கார் நிறத்து மேனியன்
பார் போற்றும் "கலைஞன்"

சுடர் விரித்த சூரியன்
இடர் களையும் வேந்தன்
படர்கின்ற பைந்தமிழை
தொடர்கின்ற தொண்டன்

அஞ்சுகம்மாள் பெற்றடுத்த அருமை மகன்
அஞ்சாமை குணம் கொண்ட பெருமை மகன்
அறிவிழந்தோர் பழிக்கும் கருமை மகன்
தமிழுக்கே இவன் தான் ஒருமை மகன்

புவிதனிலே பிடர் கொண்ட ஏறுதன்னை
அவிதனையும் விளக்கு போல் அவித்ததுவே இயற்கை - எங்கள்
கவித்தலைவன் கடக்கின்றான் கடற்கரை ஓரம்
தவிக்கின்ற மக்களை கண்திறந்து பாரும் ஐயா

பீறிட்டு எழும் பேச்சு எங்கே?
அதை பீரங்கி வண்டி கொண்டுபோகின்றதே

ஓய்வின்றி உழைத்த உடல் எங்கே?
அதை சந்தன பேழை த

மேலும்

இரங்கல் கவிதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் அண்ணாவின் மரணத்தின் போது அவரே இப்படி ஒரு இரங்கல் பாடல் எழுதியிருந்தார் கவித்தலைவன் துயில்கிறான் கடற்கரை ஓரம்---என்று எழுதுங்கள். பாராட்டுக்கள். 18-Aug-2018 3:41 pm
மிக மிக அருமை 18-Aug-2018 12:41 pm
மதியரசு - சத்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2018 1:47 pm

நீ இல்லா நிமிடங்களில் . . .

பெரிதாய் ஒன்றும் மாற்றமில்லை
கீழ்காணும் சில மாற்றங்களை தவிர

கடிகாரம் என்னோடு பேச மறுக்கும்

எனக்கும் நிழலுக்கும் இடையே
யுத்தங்கள் நடக்கும்

மனிதர்களே இல்லா தீவென
என் சூழ்நிலை மாறும்

மூச்சு காற்றும் அடிக்கடி
வேலை நிறுத்தம் புரியும்

தனிமை மிருகம்
என் மனதை புசிக்கும்

சுற்றும் உலகம்
எனக்கு மட்டும் சுற்ற மறுக்கும்

இதயம் அடிக்கடி இறங்கி போய்
நீ வருகிறாயா என பார்க்கும்

மலரை சுற்றும் வண்டுகள் கூட
எனை கேளியாய் பார்த்து சிரிக்கும்

பசிக்க மறந்து வயிறு கூட
என் உடல் நிலையை கெடுக்கும்

விரலுக்கும் உதடுகளுக்கும் இடையே
அடிக்கடி சிகரெட் கடக

மேலும்

வாசிப்பிற்கும் ரசிப்பிற்கும் கருத்து பதிவிற்குமாய் நிறைய நிறைய நன்றிகள் தோழி 17-Aug-2018 11:59 am
என்ன ஒரு அழகான வரிகள்..... இதயம் அடிக்கடி இறங்கி போய் நீ வருகிறாயா என பார்க்கும் மலரை சுற்றும் வண்டுகள் கூட எனை கேளியாய் பார்த்து சிரிக்கும்........ மிகவும் ரசித்தேன்...... வாழ்த்துக்கள்.... .. 17-Aug-2018 10:33 am
நன்றிகள் பல பார்வைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்குமாய் நண்பரே 16-Aug-2018 4:09 pm
அருமையான கவிதை. மூச்சு காற்றும் அடிக்கடி வேலை நிறுத்தம் புரியும் மற்றும் உறக்கம் தொலைத்த விழிகள் கூட உன் அழைப்பு இல்லா செல்போனை முறைக்கும் இரு வரிகளும் அற்புதம்.அருமையான சொல் ஆடல்.வாழ்த்துக்கள் கவிஞரே. 16-Aug-2018 2:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவரை பின்தொடர்பவர்கள் (1)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
மேலே