நிரோஷா றமணன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : நிரோஷா றமணன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-May-2020 |
பார்த்தவர்கள் | : 597 |
புள்ளி | : 19 |
மின்னிக்கண் சிமிட்டி
கண்ணில் பொன் கொட்டி
விண்ணில் மின் வெட்டும்
வெள்ளிகளின் வீதிக்குள்
வெண்மதி விளக்கு
அவளும் பெண்ணே!
வெள்ளித்தகடுடுத்தி
தள்ளித்தள்ளி
மெல்லத்தான்
ஓடும் மெல்லின
நதி அவளும்
பெண்ணே!
துளிர் எடுத்து
தளிர் விடுத்து
வெளி எடுக்கும்
பளிர் தொடுக்கும்
பூக்களின் இனமதுவும்
பெண்ணே!
எத்திக்கும் சுவைகொட்டி
தித்திக்கும் தேன்கொட்டி
தாய் வழியே
தான் வந்த
தமிழ் மொழியும்
பெண்ணே!
தான் பிறந்து
தான் வளர்ந்து
தான் போற்ற
தாகம் தீர்க்கும்
தாய் நாடதுவும்
பெண்ணே!
விண் நம்பி
விதை விதைத்து
வியர்வை தைத்து
விளை எடுக்கும்
விளை நிலமதுவும்
பெண்ணே!
கண்ணகி மெளனித்திருந்தால்
கதை கிடைத்திருக்காது
பெண்ணவள் மெளனித்தால்
பெண்ணியம் கிடைக்காது
புரட்சிகள் மெளனித்தால்
உரிமைகள் கிடைக்காது
உரிமைகள் மெளனித்தால்
உயர்வுகள் கிடைக்காது
துளிர் கொடுக்கும் மென்மை
தளிர் தடுக்கும் தன்மை
வெளி எடுக்கும் பூக்களின்
பளிர் தொடுக்கும் வண்ணம்
பார்த்து நாம் நிற்கையில்
பரவசமாய் பார் என்று
பகட்டாாய்த்தான் நம்புகின்றோம்
மொட்டவிழ்ந்து பூக்கையில்
மெட்டவிழ்ந்து வண்டு வந்து
மேலாக ஒலி எழுப்பி -தேன்
சொட்டெடுத்து பருகையில்
சட்டென்று புரிவதில்லை
சட்டமென்று புரிவதில்லை -அது
பூவின் உரிமை என்று🥀
கண்ணகி மெளனித்திருந்தால்
கதை கிடைத்திருக்காது
பெண்ணவள் மெளனித்தால்
பெண்ணியம் கிடைக்காது
புரட்சிகள் மெளனித்தால்
உரிமைகள் கிடைக்காது
உரிமைகள் மெளனித்தால்
உயர்வுகள் கிடைக்காது
கற்கத்தமிழ் எடுக்க
கற்கண்டு சொல் இனிக்கும்
பொற்றமிழ் சுவை கனிக்கும்
போற்றி நாம்நிற்கையில்
வெற்றித்தமிழ் நமக்கு
வேந்தர் போல் முடிசூட்டும் 👑
மேகம் வந்து வந்து
மோகனமாய் தொட்டுச்செல்லும்
அகன்று உயர்ந்த
அழகான மலை
அடர்த்தியாக செழித்த
செடிகளின் செருக்கு
கண்ணுக்கு குளிர்ச்சி
தொடர்ச்சியாக ஒலிக்கும்
பட்சிகளின் சப்தம்
காதுக்கு மகிழ்ச்சி
இலைகளின் நுனிகளில்
பூத்து நின்ற
நீர்த்துளிகள் சில
வடிந்து விழும்
வதனக்காட்சி
வசந்தம் தரவில்லை
தென்றல் வந்து வந்து
தேகம் வருடிச்சென்றது
தேன் தேடி வண்டுகள்
அங்கும் இங்கும்
பண் பாடித்திரிந்தன
கொண்டு வந்த
தேநீர்க்கோப்பை
கண்டு நிற்கும்
காட்சிகளில் ஒன்றானது
ஆவி பறந்தும் சூடு
அளவாய் இருந்தது
ஒரு மிடர் அருந்திவிட்டு
ஆழமாய் பார்ப்பதெல்லாம்
அழகழகாய் ஆர்ப்பரித்து
குறிப்புக்கள்