நிரோஷா றமணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நிரோஷா றமணன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-May-2020
பார்த்தவர்கள்:  584
புள்ளி:  19

என் படைப்புகள்
நிரோஷா றமணன் செய்திகள்
நிரோஷா றமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2022 2:38 am

மின்னிக்கண் சிமிட்டி
கண்ணில் பொன் கொட்டி
விண்ணில் மின் வெட்டும்
வெள்ளிகளின் வீதிக்குள்
வெண்மதி விளக்கு
அவளும் பெண்ணே!

வெள்ளித்தகடுடுத்தி
தள்ளித்தள்ளி
மெல்லத்தான்
ஓடும் மெல்லின
நதி அவளும்
பெண்ணே!

துளிர் எடுத்து
தளிர் விடுத்து
வெளி எடுக்கும்
பளிர் தொடுக்கும்
பூக்களின் இனமதுவும்
பெண்ணே!

எத்திக்கும் சுவைகொட்டி
தித்திக்கும் தேன்கொட்டி
தாய் வழியே
தான் வந்த
தமிழ் மொழியும்
பெண்ணே!

தான் பிறந்து
தான் வளர்ந்து
தான் போற்ற
தாகம் தீர்க்கும்
தாய் நாடதுவும்
பெண்ணே!

விண் நம்பி
விதை விதைத்து
வியர்வை தைத்து
விளை எடுக்கும்
விளை நிலமதுவும்
பெண்ணே!

மேலும்

நிரோஷா றமணன் - நிரோஷா றமணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2022 1:51 pm

கண்ணகி மெளனித்திருந்தால்
கதை கிடைத்திருக்காது
பெண்ணவள் மெளனித்தால்
பெண்ணியம் கிடைக்காது
புரட்சிகள் மெளனித்தால்
உரிமைகள் கிடைக்காது
உரிமைகள் மெளனித்தால்
உயர்வுகள் கிடைக்காது

மேலும்

நன்றிகள் 03-Aug-2022 5:36 am
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் மரபுக்கவிதை திறமை சிறப்பு. ஆனால் அவ்வழி தான் எல்லோரும் எழுத வேண்டிய கட்டாயம் இருப்பின் எல்லோராலும் எழுத முடியாது. எல்லோராலும் வாசித்து விளங்க முடியாது. இந்த உலகம் எல்லோருக்குமானது. படைப்புக்கள் எல்லோருக்குமானது. 03-Aug-2022 5:31 am
முதல்சீர் கனிச்சீர் இரண்டாம் சீர் விளம் அல்லது காய் வந்த வஞ்சித் துறை கண்ணகிமௌனி யென்றிட பெண்ணிற்கிலை பெருமையும் புரட்சியின்றிவ ருவதில்லை உரிமையுயரென் றுசொல்லுமே 02-Aug-2022 3:29 pm
முதல்சீர் கனிச்சீர் இரண்டாம் சீர் விளம் அல்லது காய் வந்த வஞ்சித் துறை கண்ணகிமௌனி யென்றிட பெண்ணிற்கேது பெருமையும் புரட்சியிலாது வருவதில்லை உரிமையுயர்வும் சொல்லுமே 02-Aug-2022 2:59 pm
நிரோஷா றமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2022 5:22 am

துளிர் கொடுக்கும் மென்மை
தளிர் தடுக்கும் தன்மை
வெளி எடுக்கும் பூக்களின்
பளிர் தொடுக்கும் வண்ணம்
பார்த்து நாம் நிற்கையில்
பரவசமாய் பார் என்று
பகட்டாாய்த்தான் நம்புகின்றோம்
மொட்டவிழ்ந்து பூக்கையில்
மெட்டவிழ்ந்து வண்டு வந்து
மேலாக ஒலி எழுப்பி -தேன்
சொட்டெடுத்து பருகையில்
சட்டென்று புரிவதில்லை
சட்டமென்று புரிவதில்லை -அது
பூவின் உரிமை என்று🥀

மேலும்

நிரோஷா றமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2022 1:51 pm

கண்ணகி மெளனித்திருந்தால்
கதை கிடைத்திருக்காது
பெண்ணவள் மெளனித்தால்
பெண்ணியம் கிடைக்காது
புரட்சிகள் மெளனித்தால்
உரிமைகள் கிடைக்காது
உரிமைகள் மெளனித்தால்
உயர்வுகள் கிடைக்காது

மேலும்

நன்றிகள் 03-Aug-2022 5:36 am
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் மரபுக்கவிதை திறமை சிறப்பு. ஆனால் அவ்வழி தான் எல்லோரும் எழுத வேண்டிய கட்டாயம் இருப்பின் எல்லோராலும் எழுத முடியாது. எல்லோராலும் வாசித்து விளங்க முடியாது. இந்த உலகம் எல்லோருக்குமானது. படைப்புக்கள் எல்லோருக்குமானது. 03-Aug-2022 5:31 am
முதல்சீர் கனிச்சீர் இரண்டாம் சீர் விளம் அல்லது காய் வந்த வஞ்சித் துறை கண்ணகிமௌனி யென்றிட பெண்ணிற்கிலை பெருமையும் புரட்சியின்றிவ ருவதில்லை உரிமையுயரென் றுசொல்லுமே 02-Aug-2022 3:29 pm
முதல்சீர் கனிச்சீர் இரண்டாம் சீர் விளம் அல்லது காய் வந்த வஞ்சித் துறை கண்ணகிமௌனி யென்றிட பெண்ணிற்கேது பெருமையும் புரட்சியிலாது வருவதில்லை உரிமையுயர்வும் சொல்லுமே 02-Aug-2022 2:59 pm
நிரோஷா றமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2022 4:56 pm

கற்கத்தமிழ் எடுக்க
கற்கண்டு சொல் இனிக்கும்
பொற்றமிழ் சுவை கனிக்கும்
போற்றி நாம்நிற்கையில்
வெற்றித்தமிழ் நமக்கு
வேந்தர் போல் முடிசூட்டும் 👑

மேலும்

சரிதான் ம்ம் 01-Aug-2022 6:44 pm
நிரோஷா றமணன் - நிரோஷா றமணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2022 12:07 am

மேகம் வந்து வந்து
மோகனமாய் தொட்டுச்செல்லும்
அகன்று உயர்ந்த
அழகான மலை

அடர்த்தியாக செழித்த
செடிகளின் செருக்கு
கண்ணுக்கு குளிர்ச்சி
தொடர்ச்சியாக ஒலிக்கும்
பட்சிகளின் சப்தம்
காதுக்கு மகிழ்ச்சி

இலைகளின் நுனிகளில்
பூத்து நின்ற
நீர்த்துளிகள் சில
வடிந்து விழும்
வதனக்காட்சி
வசந்தம் தரவில்லை

தென்றல் வந்து வந்து
தேகம் வருடிச்சென்றது
தேன் தேடி வண்டுகள்
அங்கும் இங்கும்
பண் பாடித்திரிந்தன

கொண்டு வந்த
தேநீர்க்கோப்பை
கண்டு நிற்கும்
காட்சிகளில் ஒன்றானது
ஆவி பறந்தும் சூடு
அளவாய் இருந்தது
ஒரு மிடர் அருந்திவிட்டு
ஆழமாய் பார்ப்பதெல்லாம்
அழகழகாய் ஆர்ப்பரித்து
குறிப்புக்கள்

மேலும்

பெரு மதிப்புடன் மிக்க நன்றிகள். நாளாந்த வாழ்க்கையின் பதிவுகளை கவிதைகளாக வடிக்கும் ஆர்வம் தான் எனக்கு.உங்கள் கருத்தூட்டல் மகிழ்வளிக்கின்றது.✨✨ 06-Feb-2022 10:57 am
வணக்கம் நிரோஷனி றமணன் அவர்களே அருமையான கவி வரிகள். வாழ்க்கையில் எல்லாமே அளவுடன் இருந்தால் அமைதியுடன் கூடிய அழகு நிலைத்து நிற்கும்....!! வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 06-Feb-2022 5:27 am
மேலும்...
கருத்துகள்

மேலே