ராகசெலா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராகசெலா
இடம்:  நியூஜெர்சி மாகாணம், அமெரி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Feb-2015
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  0

என்னைப் பற்றி...

\\\\r\\\\n\\\\r\\\\n

என் படைப்புகள்
ராகசெலா செய்திகள்
ராகசெலா - வெங்கடேஷ் PG அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2015 11:29 am

மழலையாய் மலர்ந்த போது
மகிழ்ந்தோம்,
இளைஞனாய் வளர்ந்த போது
கொண்டாடினோம்.
முதுமையில் தளரும் போது
மட்டும் ஏன் அதிர்ச்சி?
தேவை
அதை வரவேற்கும் முதிர்ச்சி.
புருவம் நரைக்கும் பருவம்
அனுபவித்தால்
முதுமையும் புதுமையே!

மேலும்

நல்லா இருக்கு வெங்கட் பாபு... அனைத்தும் அருமை ....தயவு செய்து மென்மேலும் தொடரவும்.. 23-Feb-2015 3:33 am
நன்றி நண்பரே. 21-Feb-2015 2:54 pm
உண்மை சிறப்பு 21-Feb-2015 2:38 pm
ராகசெலா - வெங்கடேஷ் PG அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2015 2:52 pm

என் இமைகள் எழ, அவற்றுடன்
நானும் விழித்தெழ
தொடங்கியது வழக்கமான
எனக்குப் பழக்கமான
நாள்.
கட்டிலை விட்டு இறங்கவா?
இன்னும் கொஞ்சம் உறங்கவா?
யோசிக்கிறேன்.
ஆனால் நடக்கத்தொடங்குகிறேன்
அறையை விட்டும் சென்று விட்டேன்
ஆச்சரியம்! கால்கள் தரையில் படவில்லை.
மறுகணம் இது நனவல்ல
கனவென்று உணர்ந்தேன்
மீண்டும் இமைகள் எழ
நானும் எழ
நனவுலகம்
என் கனவுலகை
வென்றது
என் கால்கள் அறையை விட்டுச்சென்றது.

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள் 23-Feb-2015 9:38 pm
உங்கள் கவிதை !!! வழக்கமான விடியல் ... சொல்லும் முறையில் புதுமையான வடியல் !!! 23-Feb-2015 3:30 am
தங்கள் இனிய கருத்திற்கு மிக்க நன்றி. இது பெரும்பாலான தினங்களில் எனக்கு ஏற்படும் அனுபவம். அந்த அனுபவத்தை வைத்துத் தான் இந்த கவிதையை எழுதினேன். 22-Feb-2015 6:47 pm
sleeping paralysis -- ன்கோ ...இது...இருந்தாலும் படைத்த விதம் அழகு. 22-Feb-2015 6:15 pm
ராகசெலா - வெங்கடேஷ் PG அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2015 6:52 am

விளை நிலங்கள்
விலை நிலங்களான போது !
மரங்கள் நின்ற இடத்தில
அடுக்கு மாடிக்குடியிருப்பின் தூண்கள்.
பறவைகளின் கூடுகளை அழித்து
மனிதர்கள் வசிக்கும்
அபார்ட்மெண்ட் கூடுகள்
மழை நீர் பருகிய நிலத்தின் வாய்
கான்கிரீட் கொண்டு நிரந்தரமாக
அடைக்கப்பட்டது.
நிலத்தின் நீண்ட கால
நீர் சேமிப்பும் சுரண்டப்படுகிறது.

மேலும்

நண்பரே விவசாயிக்கு விவசாயம் பண்ண பணம் வேணும் இல்லை என்றல் விவசாயம் பண்ண முடியாது ..... 23-Mar-2015 7:40 pm
அருமையான கவி 26-Feb-2015 10:13 pm
கவி நன்று 23-Feb-2015 10:43 pm
தங்கள் கருத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. 23-Feb-2015 9:37 pm
ராகசெலா - வெங்கடேஷ் PG அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2015 11:04 am

சொந்த இல்லம் வாங்க எண்ணி
நொந்த உள்ளங்களே

நம் கனவு இல்லம் நனவாவது
அவ்வப்போது கனவில் மட்டுமே

விலை இறங்குமா?
வேள்விகளாலும் பதில் கிடைக்காத
கேள்வி

சுனாமி அலை போல்
விலை உயர்ந்தாலும்
பினாமியில் வாங்குவோரும்
உள்ளவரை
எங்கள் கனவு இல்லம்
என்றும் கனவாகவே!

மேலும்

உங்கள் ரசனைக்கும் கருத்திற்கும் எனது மனம் கனிந்த நன்றிகள். 23-Feb-2015 9:47 pm
எளிமையான தமிழில் அருமையான வரிகள் ....மனதை தொட்டு செல்லும் ...தூங்கியிருப்போரை தட்டியும் சொல்லும் ...அருமை அருமை... வெங்கட் பாபு... 23-Feb-2015 2:44 am
சுனாமி அலை போல் விலை உயர்ந்தாலும் பினாமியில் வாங்குவோரும் உள்ளவரை எங்கள் கனவு இல்லம் என்றும் கனவாகவே மிக அருமை தோழரே 21-Feb-2015 11:43 am
நியாங்களை உண்டு கொழுக்கும் அநீதிக்கு ஆலயங்கள் எழும் அவலம்.. வரிகள் சிறப்பு வாழ்க வளமுடன் 21-Feb-2015 11:38 am
மேலும்...
கருத்துகள்

மேலே