சுதாகர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சுதாகர் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 92 |
புள்ளி | : 4 |
கவியெழுத
உறங்காத இரவுகள் பல
அன்று.
இன்றும்
உறங்காத இரவுகள் உண்டு
கவி மட்டும் தான் இல்லை.
நான் கவிஞனல்ல
எனச் சொல்லி விலகினாலும்
கவிஞனென என்னை
உலகம் சொல்லும்.
இன்றோ
அந்த நினைவுகள் தான்
என்னை கொல்லும்.
காலம் தான் என்னை
கறை ஏற்றியது
பாலன் என்னை
பைத்தியமாக்கி
இதுதான்
எனது விருப்பம் என்றது
அறியா வயதில்
புரியா காதல்
அதனால் பயன்
உளதா என்றது
காதலித்து கவிதை
எழுதும் நாட்டில்
கவிதையை
காதலித்து
எழுதினேன்.
அந்தக் காதலும்
காலத்தில்
கரைந்து போனது.
நம்படா நானும்
கவிஞன் என்றால்
என்ன வம்படா
என்றனை
உலகம் பார்க்கும்
மீண்டும் பிறப்பு
என்பதே முடிவு
இறவா வரம்
முகிலேறி உனை நானும் தொடலாகுமோ
முகிலுந்தன் துகிலாக உருமாறுமோ
தடுமாறும் எனதுள்ளம் தடையாகுமோ
தடைதாண்டி இரு உள்ளம் இடம் மாறுமோ
சிறுமீண்கள் உனையண்டி நகையாகுமோ
இருள் கூட உனக்கான சிகையாகுமோ
ஆணெண்ணும் அகங்காரம் அதிகாரமோ
பெண்ணே உன் பேரழகு பிடிமானமோ
பெண்ணென்றால் நிலவென்று சொலலாகுமோ
நிலவே நீ பெண்ணென்றால் தவறாகுமோ
நமக்கென்று இருக்கின்ற கடன் தீருமோ
வருங்காலம் அதற்கான தளமாகுமோ
விடிகாலை நமக்கான பிரிவாகுமோ
அழுகின்ற நீர்த்துளி தான் பனியாகுமோ
விடிவெள்ளி வானத்தில் உருவாகுமோ
மறுநாளில் மறுபடியும் வரலாகுமோ
இனிக்கின்ற இதழ் ரொம்ப சுவையாகுமோ
இனிப்பே உன் இதழில் தான் உருவாகுமோ
நிலவே நம் பெருங்க
" சொன்னா கேள்றா. நான் கட்டினா அவளத்தான் கட்டுவேன். இல்லன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்"
"லூசாடா நீ. யாருன்னே தெரியாத ஒருத்திய கல்யாணம் பண்ணுவேன்னு அடம் புடிக்காத."
" யாருன்னே தெரியாதவ இல்லடா அவ. அவ என் க்ளாஸ் மேட். நான் சின்ன வயசுல மனசொடிஞ்சி போன பல சந்தர்ப்பங்கள்ல எனக்கு ஆறுதல் சொல்லி என்ன தேத்துனவ அவ. எனக்கு பொண்டாட்டின்னா அவதாண்டா "
"அவ இந்நேரம் எவன கல்யாணம் பண்ணி எத்தன புள்ள பெத்திருப்பாளோ?"
"ச்சே ச்சே அப்படி எல்லாம் இருக்காது"
" எத வெச்சு சொல்றே?"
" ஒரு நம்பிக்கை தாண்டா. போன வருஷம் நான் அவள கடைசியா மீட் பண்ண வரைக்கும் அவளுக்கு கல்யாணம் ஆகல. இப்பவும் ஆயிருக்காது. "
" மொதல்ல நீ போன வரு
கண்முன் இறைவன் கனிவாய் வந்து
என்னடா வரம் வேண்டும் என்றார்
முதலில் நீதான் கடவுள் என்றால்
அதிலே உண்மை உளதா என்றேன்
அதற்கும் சாட்சி வேண்டும் என்றால்
அதற்கொரு தேவை எனக்கி்லை என்றார்
கோபம் கொண்டு கடவுள் போக
வாரும் வரம்தனை தாரும் என்றேன்
கேட்டால் தானே தரணும் என்று
போட்டார் கடவுள் ஒரே போடு
கடவுள் கூட முன்னே வந்தால்
கடவுச் சொல்லால் அறியும் காலம்
கடவுள் வருவார் வரம்தனை தருவார்
என்றெனக்கு எப்படி தெரியும்
அதனால் நானும் தலையை தடவ
நாளை வரவா என்றவர் விணவ
இன்றே கேட்பேன் என்றேன் நானும்.
அறிஞன் கவிஞன் புலவன் தலைவன்
ஆகும் வரமது தந்திடு வென்றேன்
எல்லாம் சரிதான் ஆனால் நீயும்
மனிதன் தானா முதலில
கண்முன் இறைவன் கனிவாய் வந்து
என்னடா வரம் வேண்டும் என்றார்
முதலில் நீதான் கடவுள் என்றால்
அதிலே உண்மை உளதா என்றேன்
அதற்கும் சாட்சி வேண்டும் என்றால்
அதற்கொரு தேவை எனக்கி்லை என்றார்
கோபம் கொண்டு கடவுள் போக
வாரும் வரம்தனை தாரும் என்றேன்
கேட்டால் தானே தரணும் என்று
போட்டார் கடவுள் ஒரே போடு
கடவுள் கூட முன்னே வந்தால்
கடவுச் சொல்லால் அறியும் காலம்
கடவுள் வருவார் வரம்தனை தருவார்
என்றெனக்கு எப்படி தெரியும்
அதனால் நானும் தலையை தடவ
நாளை வரவா என்றவர் விணவ
இன்றே கேட்பேன் என்றேன் நானும்.
அறிஞன் கவிஞன் புலவன் தலைவன்
ஆகும் வரமது தந்திடு வென்றேன்
எல்லாம் சரிதான் ஆனால் நீயும்
மனிதன் தானா முதலில