கிளையாளி சரவணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கிளையாளி சரவணன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jul-2017
பார்த்தவர்கள்:  103
புள்ளி:  2

என்னைப் பற்றி...

உலகை நேசிப்பவன். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற எண்ணம் கொண்டவன். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என ஏங்குபவன்.

என் படைப்புகள்
கிளையாளி சரவணன் செய்திகள்
கிளையாளி சரவணன் - மயில்வாகனன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2017 12:26 am

"தந்தையர் நாடென்று" என்று தாய் நாட்டை என் பாடினார் பாரதி ????

மேலும்

தாய்நாடு அடிமைப்பட்டுக் கிடந்தது. தகப்பன் பிள்ளைக்குத் தானே!, தந்தையர் நாடு செயர்களுக்கல்லவா! பாரதி என்றுமே எவர் உரிமையையும் விட்டுககொடுப்பவன் அல்ல! நீண்ட கோபக்காரன். ஆனால் நியாயவாதி. 26-Sep-2017 6:22 pm
இங்க அவர் தந்தையர் நாடெனும் போதினிலே...என்று சொல்வது...நம் நாட்டின் மீது நமக்கு உள்ள உரிமையை பற்றியது..தாய் நாட்டின் மீதும் உரிமை உண்டு ஆனால்..தலை ப்ரவசவதில் பிறந்த பிள்ளை..தாயின் ஊரில் தான் பிறக்கும்...ஆனால் அந்த ஊரின் மீது அவனுக்கு முழு உரிமை கிடையாது.. தந்தையின் ஊர் தான் அவன் சொந்த ஊர்... சொந்த ஊரின் மீது தன உங்கள் உண்மையான உரிமையை காட்ட முடியும்.. இங்கே என் தந்தை நாட்டின் மீது எனக்கு மட்டும் தான் உரிமை உண்டு...அந்த உரிமையை நினைக்கும் பொது புது சக்தி எனக்குள் பிறக்கிறது என்று அர்த்தத்தில் சொல்ல பட்டது.. இன்னும் விஞ்ஞான முறையிலும் இதை சொல்லாம்... 24-Sep-2017 9:25 pm
தனி தமிழ் நாடு கேட்டு போராட்டம் நடத்தினார பாரதி..?????? நாடு என்று இந்தியா வை தன சொன்னார்... 24-Sep-2017 9:02 pm
அது புதுவையின் தாக்கம். பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவையில் வாழ்ந்த பாரதிக்குப் பிரஞ்சு மொழிப் பயிற்சியும் உண்டு. பிரஞ்சுத் தேசிய கீதத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். பிரஞ்சு மொழியில் தந்தை நாடு என்றுதான் சொல்வார்கள். சொல்லும் போது மூச்சில் சக்தி பிறக்கத்தான் தந்தை நாடு என்று பாடினார்! சக்தி பிறக்கிறதா? 21-Sep-2017 6:23 am
கிளையாளி சரவணன் - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 10:27 am

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

மேலும்

உண்மையான அன்பும், நேசமும் 26-Sep-2017 6:13 pm
உண்மையான அன்பு 23-Sep-2017 10:51 pm
என்ன, கேள்வி கேட்டு ஒரு மாதமாகிறது, ஒரு பதில்கூட வரவில்லையா? ஹா ஹா .....! எதிர்பார்த்து எதிர்பார்த்து எல்லாரும் ஏமாந்து போனார்களா....?! 21-Sep-2017 5:22 am
சந்தேகிக்காத அன்பு . சிரித்த முகம் & இன்சொல். நல்ல சமையல் . வீட்டை அழகாகவும் தூய்மையாகவும் வைத்திருத்தல். யாரையும் நன்கு வரவேற்று உபசரித்தல். குழந்தைகளை அடிக்காமல் அழாமல் பார்த்துக் கொள்ளுதல். சிக்கனம். நச்சரிக்காமல் இருத்தல். ஏதோ ஒரு தப்புக்காக 'அதற்குச்' சம்மதிக்காதிருத்தல். 21-Sep-2017 5:16 am
கிளையாளி சரவணன் - Rose அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2017 10:58 am

Nesam + urukki = serthu eluthu

மேலும்

Adikkum+alai=serthu eluthuga 17-Dec-2018 11:32 pm
Adikkum+alai 17-Dec-2018 11:29 pm
nesamurukki 26-Sep-2017 6:11 pm
நேசமுறுகி 24-Sep-2017 1:46 pm
கிளையாளி சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2017 6:55 pm

வண்ணமோ பொன்மஞ்சள்
வடிவமோ வட்டமுகம்
எண்ணத்திலோ குளிர்சசி
வானத்திலோ நட்சத்திர ஊர்வலம்
கண் இரண்டும்
திறந்து விடில் காணக்கோடி
இன்பம்.
தண்ணிலவே
உன்னையா ஆண் என்றார்
தவித்து விட்டேன் ஒரு கனமே,
கண் மூடிப் படுத்தாலும்
கனவில்கூட வந்தாலும்
அதிலும் உன் உருவம்
கட்டழகு மங்கையடி!
வானத்து தாரகையே
வண்ண வடிவழகி
ஆணாக நீ இருந்தால்
ஐயகோ, ஐயகோ!
அவனயிலே ஆண்களுக்கு
என்ன இது சிந்தனை?
ஆததிரம் தான் வந்தாலும்
என்னருகே நீ இருந்திடு
எப்போதும் பெண்ணாக!

மேலும்

கிளையாளி சரவணன் - Gokul அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2017 1:57 am

௧)அங்கத்தினர்-
௨)அர்த்தம்
௩)அலங்காரம்
௪)ஆரம்பம்
௫)விஞ்ஞானம்
௬)தீபம்
௭)கும்பாபிக்ஷேகம்
௮)சாவி
௯)சரித்திரம்
௧௦)சபதம்
௧௧)சாதம்
௧௨)பௌத்திரி
இவை அனைத்திற்கும் பொருத்தமான தமிழ் சொற்கள் என்ன ?

மேலும்

சபதம் என்பதற்குத் தமிழில் வஞ்சினம் அல்லது சூளுரை என்பனவற்றைக் கொள்ளலாம். ஆணை என்பது பொருந்தாது. 12-Jul-2017 12:12 pm
௧.உறுப்பினர், ௨.பொருள். ௩.ஒப்பனை, ௪.துவக்கம், ௫. அறிவியல், ௬.விளக்கு, ௭. குடமுழுக்கு, ௮. திறவுகோல், ௯. வரலாறு, ௧௦. சூளுரை, ௧௧. சோறு, ௧௨. பெயர்த்தி. 08-Jul-2017 1:20 pm
பௌத்திரி - புத்திரி - மகள் ! 06-Jul-2017 12:45 am
அப்படியா!! நன்று. 03-Jul-2017 10:10 am
மேலும்...
கருத்துகள்

மேலே