sirajudeen - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sirajudeen |
இடம் | : Tamilnadu |
பிறந்த தேதி | : 13-Jun-1975 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jul-2010 |
பார்த்தவர்கள் | : 120 |
புள்ளி | : 24 |
ungalaipol oruvan
உதிர்கின்ற இலைகளுக்கெல்லாம்
அழுதுகொண்டிருந்தால்,
மரங்கள் கனி தரமுடியாது...
எரிகின்ற திரிகளுக்கெல்லாம்
வருந்திக்கொண்டிருந்தால்
தீபங்கள்
ஒளி தரமுடியாது...
விரல்பிடித்து நடந்த
விபரம் அறியா
பருவத்தில்கூட
வீழ்ந்தவுடன்
எழுந்து நடந்தோம்..
இன்றோ,
வீழ்ந்துவிடுவோம்
என்ற பயமே
பாதி கொள்கிறது....
வெற்றி,
தோல்வி,
இரண்டும்
இறைவன் வடிவமைத்த
காலக்கடிகாரத்தில்
இரண்டு முட்கள்.
திரும்ப திரும்ப
வந்துபோகும்,
நிலைத்திருக்கும் நியதியில்லை...
மரணம்,
ஒருநாள்
வருமெனத்தெரிந்தும்,
மனிதன்
வாழ்ந்துகொண்டுதான்
இருக்கின்றான்...
தோல்வியின் முடிவை
முயற்சியாக்கு,
முயற்ச
உதிர்கின்ற இலைகளுக்கெல்லாம்
அழுதுகொண்டிருந்தால்,
மரங்கள் கனி தரமுடியாது...
எரிகின்ற திரிகளுக்கெல்லாம்
வருந்திக்கொண்டிருந்தால்
தீபங்கள்
ஒளி தரமுடியாது...
விரல்பிடித்து நடந்த
விபரம் அறியா
பருவத்தில்கூட
வீழ்ந்தவுடன்
எழுந்து நடந்தோம்..
இன்றோ,
வீழ்ந்துவிடுவோம்
என்ற பயமே
பாதி கொள்கிறது....
வெற்றி,
தோல்வி,
இரண்டும்
இறைவன் வடிவமைத்த
காலக்கடிகாரத்தில்
இரண்டு முட்கள்.
திரும்ப திரும்ப
வந்துபோகும்,
நிலைத்திருக்கும் நியதியில்லை...
மரணம்,
ஒருநாள்
வருமெனத்தெரிந்தும்,
மனிதன்
வாழ்ந்துகொண்டுதான்
இருக்கின்றான்...
தோல்வியின் முடிவை
முயற்சியாக்கு,
முயற்ச
உனக்கு நான்,
எனக்கு நீ,
இப்படி என்னென்னவோ பேசி
எப்படியெல்லாமோ
காதலித்தோம்...
காதல் காதல் காதல்
காதல் போயின் சாதல்
என கவிதைகள்
பரிமாறிக்கொண்டோம்...
நாட்கள் நகர்ந்தது...
வழக்கம்போல்
வாழ்க்கையின் சில
திருப்பங்கள் நம் காதலை
தரம்பார்த்தது..
ஒரு நாள்,
உன்னோடு வாழ விரும்பவில்லை…
என உதட்டளவில்
சொல்லி நின்றாய்...
ஒரே வார்த்தையில்
நானும் சொன்னேன் "சரி" என்று!...
நினைத்திருக்கலாம்
நிஜமாகத்தான் இவன்
காதலித்தானா? என்று...
அடி போடி
பைத்தியக்காரி...
உன் சந்தோசத்திற்கு
நான் இல்லாமல்
போகவேண்டுமென்றால்
இறந்துகூடப்போவேன்...
உன்னை
முதன்முதலாய் பார்த்தது
ஒரு பேருந்து நிலையத்தில்...
எதிரெதிர் திசையில்
நின்றாலும்
ஒரே திசையில்
நம் பார்வைகள்,
இன்னொரு முறை
திரும்பிடமாட்டாயா?
ஏக்கத்தில் நானிருக்க,
உனக்கான பேருந்தை
தூரத்தில் கண்டவுடன்...
முதன்முதலாய்
கவலைகொண்டேன்
சரியான நேரத்தில்
பேருந்து வந்ததற்கு...
ஏறிச்சென்ற உன்னுடன்
என் இதயமும் வந்தது
உனக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை...
இன்னும்
காத்துக்கொண்டுதானிருக்கிறேன்...
நீ எடுத்துச்சென்ற இதயத்தை
திருப்பி கேட்டிட அல்ல,
இறப்பதற்குள்,
எப்படியாவது
உன்னை
இன்னொருமுறை
பார்த்திடமாட்டேனா என்று?...