ஸ்ரீதர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஸ்ரீதர்
இடம்:  poondi
பிறந்த தேதி :  14-Jun-1969
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jul-2013
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  12

என் படைப்புகள்
ஸ்ரீதர் செய்திகள்
ஸ்ரீதர் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2014 4:02 pm

சேதி ஏதும் அறிந்தனையோ தோழி -நான்
செத்தொழிந்து போனென்று-எந்தன்
சேதி தெரியாதா- நான் வேறு
நாதி இல்லாதவன் என்று

வீதி மறந்தேனடி உன்னால்- என்
விதியை நொந்தேனடி-பார்த்த உன்
விழியாலே நான் பள்ளத்தில்
வீழ்ந்தேனடி

நோயும் ஏதுமின்றி நான்
நோக்கம் தொலைந்தேனடி-உந்தன்
தாக்கம் மிகுந்ததினால்-நான்
ஏக்கத்தில் சாவேனடி

வேதனை தருவதற்கே எந்தன்
வழியினில் வந்தாயோடி-எனக்கு
தூதென யார்வருவார்-என்
விழியினில் குருதியடி

உள்ளம் கொதிக்குதடி -என்
உதிரம் தகிக்குதடி-உந்தன்
கள்ளம் புரியாமல் -எந்தன்
எண்ணம் சிதறுதடி

இன்னும் என் உள்ளத்திலே
ஏதேதோ தோணுதடி-மேலும்
எழுத முடியாமல் விழிகளை
கண்ணீர் மூ

மேலும்

ஸ்ரீதர் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2014 3:40 pm

இறந்தா போனேன் நான் -ஏனோ
மறந்தே போனாய் நீ
மரித்தா போனேன் நான்-என்னை
எரித்துப் போனாய் நீ

என்னை காட்டிலும்
என்னை உணர்ந்தவள் நீ-என்ற
எண்ணம் கலைத்தாய் -என்னில்
என்னை தொலைத்தாய் நீ

என்னை புரிந்தும் எல்லாம் தெரிந்தும்
முன்பே உரைத்தும் முழுதாய் அறிந்தும் ,
நீங்கி சென்றதும் நிஜமாய் மறந்ததும்
ஏங்கி சாவதே எனக்கென ஆனது

தேங்கி போன சேறாய் ஆனேன்
உள்ளும் புறமும் உணராதிருந்தேன்
நேற்றும் இன்றும் புரியாதிருந்தேன்
நினைவில் என்னை நீங்காதிருந்தேன்

காலம் இல்லையோ கண்ணே உனக்கு
கருத்தில் தொலைந்ததோ என் முகம் உனக்கு
கட்டளை பிறந்ததோ எனை நீ மறக்க
காரணம் நூறு உனக்கென இருக்க

நோ

மேலும்

நன்று! 19-Apr-2014 10:02 pm
அருமை 19-Apr-2014 6:14 pm
ஸ்ரீதர் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2013 1:17 pm

தகவல் ஏதும் அறிந்தாயோ -நான்
தகனமாகி போனேனென்று
தவிர்த்து போக நினைத்தாயோ-நான்
தகித்து போனால் என்னென்று

தவிக்கவிட்டு இருப்பது ஏன் -நான்
தாளமாட்டேன் என அறிந்தும்
தடுத்து நிற்பது எது உன்னை -நான்
தாங்கமாட்டேன் என புரிந்தும்

நெருப்பில் இட்டு பொசுக்குகிறாய்-என்
கருத்தை சிதைத்து கலக்குகிறாய்
இருப்பை இல்லாதாக்குகிறாய் -எனை
செல்லா காசாயாக்குகிறாய்

ஜீவன் போன பின்னாலும் -நான்
உன்னோடு இருப்பது ஆகுமென்றால்
உடனே நான் உயிர் துறப்பேன் -என்
பெண்ணே உந்தன் அருகிருப்பேன்

உன்னை பிரிந்த பின்னாலே -நான்
உயிரோடு இருக்கும் பிணம் தானே
உயிரே விலகி போகதே
உருக்கி உருக்கி கொல்ல

மேலும்

நன்று! 25-Nov-2013 6:55 pm
ஸ்ரீதர் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2013 3:43 pm

வாழ்வே நீ என நினைத்திருந்தேன்-உன்
வாசம் எனெக்கென நினைத்திருந்தேன்
நேசம் எனெக்கென நினைத்திருந்தேன்
யாவும் எனெக்கென நினைத்திருந்தேன்

காதல் எனெக்கென நான் உணர்ந்தேன்-உன்
கருத்தில் நான் என திளைத்திருந்தேன்
கனவே நீ என கரைந்திருந்தேன்
கவலை என்பதை மறந்திருந்தேன்

நினைவில் நீ இல்லா பொழுதினிலே
கனவில் உன்னுடன் நான் இருந்தேன்
நிஜத்தில் அருகில் நீ இல்லையெனில்
நினைவில் அருகில் நான் இருந்தேன்

உணர்வில் என்னுடன் நீ இருந்தாய்
உடலால் வேறென நீ இருந்தாய்
உளத்தில் நீயே நிறைந்திருந்தாய்
உருவில் நானாய் நீயிருந்தாய்

பிரிவே என்பது இனியேது
உறவே நீயன்றி கிடையாது

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

சாமுவேல்

சாமுவேல்

சென்னை
Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
user photo

tamildasan

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (11)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

sarabass

sarabass

trichy
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே