Vandhiyathevan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Vandhiyathevan |
இடம் | : USA |
பிறந்த தேதி | : 14-Aug-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 144 |
புள்ளி | : 60 |
தமிழ் ஆசிரியையின் மகனாகப் பிறந்து , திரைகடல் ஓடித் திரவியம் தேடிக் கொண்டு இருக்கும் ஒரு தமிழ்(குடி)மகன் !!
கணிக்க முடியா ஓர்
கணிதம்
விவரிக்க முடியா ஓர்
விஞ்ஞானம்
விடையறிய முடியா ஓர்
விடுகதை
அது பங்குச்சந்தை அல்ல
நேற்றைய நிலவரப்படி
இந்நொடியை கணிப்பதற்கு
அது சதுரங்கமும் அல்ல
நடக்கப்போவதை கணித்து
மாற்றி விளையாடுவதற்கு
நிலவரத்தால் நடுங்காமல்
கணிப்பால் கலங்காமல்
வாழ்வை வாழ்வோம் !
அபாய வளைவுகளில்
கவனம் தேவை
சாலையிலும் ...
சேலையிலும் ...
பாரதம் ...
பரதமும் ஓடிசியும்
கலந்தாடும் களமிது
காந்தியும் சுபாஷும்
குடியிருந்த கோட்டையிது
சிவனையும் புத்தனையும்
சேர்த்த சிற்பமிது
அல்லாவையும் ஏசுவையும்
பிணைத்த கதையிது
கங்கையும் காவிரியும்
பாய்ந்தோடும் நாளமிது
அரிசியும் கோதுமையும்
செழிக்கும் காணியிது
தமிழும் சம்ஸ்கிருதமும்
தோய்த்த ஓலையிது
குமரியும் இமயமும்
பாதுகாக்கும் கணமிது
வேற்றுமையில் ஒற்றுமை
என்றனர், வேற்றுமையே
இல்லையே பிறகெதற்கு
ஒற்றுமை ?
எல்லையைக் காக்கும் படை
வீரர்களுக்கு வணக்கம் வைத்து
உவப்புடன் வணங்குகிறேன், இந்தியக்
குடியரசை, எங்கள் பேரரசை !
பாரதம் ...
பரதமும் ஓடிசியும்
கலந்தாடும் களமிது
காந்தியும் சுபாஷும்
குடியிருந்த கோட்டையிது
சிவனையும் புத்தனையும்
சேர்த்த சிற்பமிது
அல்லாவையும் ஏசுவையும்
பிணைத்த கதையிது
கங்கையும் காவிரியும்
பாய்ந்தோடும் நாளமிது
அரிசியும் கோதுமையும்
செழிக்கும் காணியிது
தமிழும் சம்ஸ்கிருதமும்
தோய்த்த ஓலையிது
குமரியும் இமயமும்
பாதுகாக்கும் கணமிது
வேற்றுமையில் ஒற்றுமை
என்றனர், வேற்றுமையே
இல்லையே பிறகெதற்கு
ஒற்றுமை ?
எல்லையைக் காக்கும் படை
வீரர்களுக்கு வணக்கம் வைத்து
உவப்புடன் வணங்குகிறேன், இந்தியக்
குடியரசை, எங்கள் பேரரசை !
சிகப்பு சேலை அணிந்த சீமாட்டி
என் மனதை கொள்ளை கொண்டாளே
அவள் புன்சிரிப்பை காட்டி
தூரத்தில் நின்றாளே ஆற்றின் வளைவு காட்டி
என் கால்கள் அவள் நின்ற திசை
நோக்கி நகர்ந்ததே போக்கு காட்டி
சென்றாள் அன்ன நடை காட்டி
என் கண் அவளைப் பின்
தொடர்ந்ததே என்னிடம் டூ காட்டி
என்னை அவள் பார்த்த கணம்
தென்றல் வீசியதே என்னை நோக்கி
அவள் பார்த்த பின் நான்
என்னை விட்டு ஓடினேனே விலகி விலகி
பூவைச் சுற்றிய சேலையின் நடுவே
தெரிந்ததே ஒரு வெள்ளிக் கீற்று
என் கைகள் அதனை பக்கத்
துணையாக்க பறந்ததே வெள்ளிடை நிரப்ப ...
சிகப்பு சேலை அணிந்த சீமாட்டி
என் மனதை கொள்ளை கொண்டாளே
அவள் புன்சிரிப்பை காட்டி
தூரத்தில் நின்றாளே ஆற்றின் வளைவு காட்டி
என் கால்கள் அவள் நின்ற திசை
நோக்கி நகர்ந்ததே போக்கு காட்டி
சென்றாள் அன்ன நடை காட்டி
என் கண் அவளைப் பின்
தொடர்ந்ததே என்னிடம் டூ காட்டி
என்னை அவள் பார்த்த கணம்
தென்றல் வீசியதே என்னை நோக்கி
அவள் பார்த்த பின் நான்
என்னை விட்டு ஓடினேனே விலகி விலகி
பூவைச் சுற்றிய சேலையின் நடுவே
தெரிந்ததே ஒரு வெள்ளிக் கீற்று
என் கைகள் அதனை பக்கத்
துணையாக்க பறந்ததே வெள்ளிடை நிரப்ப ...
பிறந்தநாளாம்
தமிழன்னையின்
பிறந்தநாளாம்
கம்பனையும் கல்கியையும்
வள்ளுவனையும் பாரதியையும்
வற்றாமல் ஈணும்
பெருந்தாயின் பிறந்தநாளாம்
கார்பன் டேட்டிங்கும்
கணக்கிலட முடியா
தொன்மையின் பிறந்தநாளாம்
வயதில் தொன்மையனாலும்
சொல்லழகிலும் நடையழகிலும்
ரம்பைக்கு சவால்விடும்
ரதியின் பிறந்தநாளாம்
அழகில் மயங்கி
சில பல
காலமாய்
கவர முயற்சித்து
கவ்வினார் மண்ணை
கலக்க முயற்சித்து
கலந்தார் காற்றோடு
அழிக்க முயற்சித்து
அழிந்தார் கால ஆற்றோடு
வாழ்த்த வயதில்லை
நம் அன்னையை
வணங்குகிறேன் பெருமையோடு
பேரிகைப் பேரிடியாய்
பறைசாற்றுகிறேன் தமிழனென்று !
தித்திக்கும் கரும்பை திகட்டாமல் தின்று
தித்திக்கும் அன்பை திகட்டத் தந்து
இனிப்பான பொங்கலை இனிதே உண்டு
இந்நாளும் இவ்வருடமும் இனிதே சிறக்க
தித்திக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !