vignesharusamy - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vignesharusamy |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 71 |
புள்ளி | : 1 |
வாழிய தமிழ்..!வாழிய தைமகள் ..!
வாழிய உழவர்.!வாழிய ! வாழியவே!..
"அனுபவ நெருப்பிட்டு
நெகிழ் தன்மை புகுத்தி
நெருக்கடிக்குள்
அடிக்கப்படும்
இரும்பே (மனமே)
கூர் முனையாய்
(அறிவினில் தெளிவுபெறும்)
வடிவெடுக்கும்."
பிரச்சனைகளுக்குள்
வாழ்க்கை !
உண்டியில் சற்று
அதிகம் சேர்த்த
உப்பாகும்.
சமநிலைப்படுத்தாவிட்டால்,
பட்டினி உறுதி .
தெளிவு பெற்ற
மன நிலையில்
பட்டினியும் இருப்போமா?
பிரச்சனைகளால்
புத்தி கொள்முதல்
பெறுவோம் ,
வந்த பிரச்சனைகளால்
பட்ட துன்பத்தை
மறந்தாலும் ,
பெற்ற பாடத்தை
மறந்திடுவோமா?
"பெற்றதொரு கல்வி மனப்பழக்கம்"
ஒளவை
காலியாய் இருக்கும் மூளைக்கு
கலர் அடிக்கும் வேலை !
இருண்ட இதயத்தில்
ஒளி கூட்டும் சாலை !
காய்ந்து விட்ட இடத்துக்கு
நிழல் வேயும் ஓலை !
கற்பக விருட்சமாய்
கற்பிக்கும் சோலை !
வருங்காலம் காட்ட வந்த
வரலாற்று ஜோதி
வற்றாமல் அறிவூட்டும்
வசந்த கால அமுதம்
வாழ்க்கை பாடத்தை
வடித்து எழுதும் பலகை
பாதிப்புகளை தள்ளி
போதிப்புகளை அள்ளித் தரும்
புதையல் சுரங்கம்
அறிவுலக வாதிகளை
அவதரிக்க செய்யும் சுரங்கம்.
நன்றி உணர்தல் ஒரு ஆனந்தம்.
------------------------------------------------
1. நன்றன்று நன்றிமறப்பது
2. உய்வில்லையாம்...செய்நன்றி கொன்றவர்கு.
( (வள்ளுவம் )
3. மிகுந்த ஒழுக்க சீலர்களில் பலர் ,
வாழ்வில் தோல்வி கொள்வது ,
(அல்லது) மேன்மையுறாதது
ஏனென்று ஆய்ந்ததில் ,