gokuljan10 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : gokuljan10 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 3 |
தமிழ் வேண்டும் ,
என்றென்றும்
நற்தமிழே வேண்டும்.
தரணியெங்கும் நற்தமிழ்
தடை நீங்கி அருவிஎனப்
பாய்தல் வேண்டும் ,
தன்னிகரில்லாத்
தனித்தமிழ் நுனி நாவில்
தவம் புரிதல் வேண்டும்.
கொஞ்சும் நற்தமிழ்
எங்கும் குலாவித்
தவழல் வேண்டும்,
கொச்சைத் தமிழ்தனை
களைந்தே பேசுதலில்
கவனம் வேண்டும். (ஊடகம்/மேடைகளில்)
விருந்தென வரும்
மொழிதனில் விருப்பம்
கொள்ளாமை வேண்டும்.
அது பெருமைஎன்று
பகட்டும் மனதெல்லாம்
மாற்றம் பெறுதல் வேண்டும்.
அமிழ்தினும் இனிய
நம் மொழிதனின் அருமை
உணர்தல் வேண்டும்,
அது பண்பட்டது ஐந்தாயிரம்
அகவைக்கு மேல் என்று
அறிந்திடவேண்ட
வாழிய தமிழ்..!வாழிய தைமகள் ..!
வாழிய உழவர்.!வாழிய ! வாழியவே!..
விடுதலை நாதம் ஓய்ந்தது - கை
விலங்கின் விழிகள் அழுகுது
இமய இதயம் சாய்ந்தது
இறைவன் பாதம் சேர்ந்தது
உறுதியின் லட்சியம் மறைந்தது
உரிமை குரல் கலைந்தது
கொள்கைக் குன்று உடைந்தது
கொட்டிய முரசு முடிந்தது
கருப்பு வைரம் புதைந்தது
கருத்து பெட்டகம் தொலைந்தது
உலகின் உள்ளம் பதறுது
உன்னை நினைத்து கதறுது.
கன்னி பெண்ணே நீ கையைத் தட்டு
கண்ணாடி வளையிட்டு கைத்தட்டு..!
பகல் தோழி பெண்ணோடு கைத்தட்டு
பரிசம் போட வாரான் கையைத் தட்டு..!
பட்டணம் போனவுன் மாமன் வாறான்
பட்டமும் படிச்சுட்டு பாய்ஞ்சு வாறான்..!
கண்டாங்கி சேலையும் வாங்கி வாறான்
கல்யாண பொண்ணுனை காணவாறான்..!
ஆனி முடிஞ்சாச்சு ஆவணி வந்தாச்சு
ஆட்டமும் பாட்டமும் வந்துடிச்சு..!
ஆசை கல்லியாணம் கண்ணிலு கண்டாச்சு
ஆனந்தம் பாடி நீ கைத்தட்டு..!
தாவணி போட்டு நீ பறந்தவளே
தாரமாய் அவனுக்கு போகப் போற..!
தங்கமே அவனோட நடக்க போற
தன்னோட மாருலே சேர்க்க போற..!
- (கன்னி பெண்ணே)
அத்தையின் சொல்படி நடந