விஜயபாரதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விஜயபாரதி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 232 |
புள்ளி | : 7 |
வீழ்வது தவரல்ல..
ஆனால்..
எழ மறுப்பது குற்றம்..!
வீழ்ந்தவன் வீரனாவது
ஆச்சரியம் அல்ல..!
வெற்றியில் களிப்பு
கொள்ளாதிருக்கலாம்..
ஆனால் தோல்வியில்
களைப்பு கொண்டு விடக்கூடாது..!
வெற்றி கொண்டவன் மட்டுமே
வாழ்வான் எனில்
வெற்றி என்பதே வாழ்வில் இராது..!
வெற்றி பெற்றதால்
வாழ்விர்க்கு மதிப்பு கூடலாம்..
ஆனால் தோல்வி இருந்தால் மட்டுமே
வெற்றிக்கு மதிப்பு சேரும்..!
பெண்ணாக பிறப்பது சிறப்பு..
ஆனால் உயிர் கொடுப்பதால் தான்
பெண் என்பவள் சிறப்பு..!
என் வாழ்வின் அனைத்துமே
வெற்றி தான் என்று ஒருவன்
சொல்வான் எனில்..
அவன் இருளில் நின்று
இந்த உலகமே என் நிழலாக
உள
விழுந்த விதையெல்லாம்
மண்ணோடு புதைந்தாலும்,
முந்தி வரும் ஒரு விதை
அது இம் மண்ணை வென்று வரும்
என்று சங்கே நீ முழங்கு..!
இம் மண்ணிலே பிறந்ததால்
மனிதனாகிவிட்டேன்..
மனிதனாக பிறந்ததால்
மானம் கொண்டுவிட்டேன்..
மானம் கொண்ட எவரும்
மண்ணோடு புதைந்ததில்லை
என்று சங்கே நீ முழங்கு..!
தாயும் நாடும் ஒன்றென்று
பாலூட்டி வளர்த்தது அவளென்று
அவளும் கொண்டுள்ளாள் கற்பு
அதை போற்றிக் காப்பதே சிறப்பென்று
சங்கே நீ முழங்கு..!
தெய்வங்கள் மண்ணில் பிறப்பதில்லை
பிறப்பது உண்டு மழழை செண்டு..!
தெய்வங்கள் மழழைகள் வேறில்லை
இருவரும் தீமைகள் நினைப்பதில்லை..!
கேட்கட்டும் மழழைச் சிரிப்ப
உனது கிராமமும்..
எனது கிராமமும்..
துரத்த..
சென்னை வண்டி ஏறியது..
நம் காதல்.
கோவிலில்
வைத்துத்தாலிகட்டி..
வாடகை வீட்டில் குடியேறியபோது..
அந்த வீட்டில்
உன்னையும், என்னையும் தவிர..
வேறு பாத்திரங்கள் கிடையாது.!
நாம் ஓடிவந்த செய்தியில்..
ஊர் பற்றிக்கொள்ள..
உதயம் தியேட்டர் வாசலில்..
நின்றுகொண்டிருந்தோம்..
ஜில்லுனு ஒரு காதலுக்காக..!
தோட்டத்தில் ஊஞ்சல்கட்டி..
ஆடித்திரிந்த உனக்கு..
கதவே திறக்காத
சென்னைவாசிகள்..
அந்நியமானார்கள்..!
மாடியில் நின்று..
நான் மறையும்வரை..
பார்த்துவிட்டு..
தனிமைக்குள் நீ..
புதையத்துவங்குவாய்..!
அலுவலகம் நுழையும் போதே..
நான்கு சுவர்களுக்கு
காதலனாகத்தான் இருக்கிறேன்..
காதலிக்கான இடம் மட்டும் நிரப்பப்படாமல்..!
என் வாழ்க்கை திறந்த பாலைவனமாக
வரண்டு கிடந்தபோது
மலர்ந்த ஒற்றை ரோஜா நீ..!
அன்று நான் உன்னை கண்டேன்..!
விடை தெரியாமல் சுற்றியலைந்த
வாழ்வினில் தமிழ் எழுதிய
கவிதை நீ..!
அன்று நாம் பேசிக்கொண்டோம்..!
நெடுநாள் வெடித்ததிருந்த பூமியில்
வந்து விழுந்த சில்லென்ற
மழைத்துளி நீ..!
அன்று என்னுள் காதல் பூத்தது..!
மழைத்துளியை திருடிய சிப்பி
முத்தொன்றை உயிர்ப்பித்தது..!
அன்று நான் என் காதலை
உன்னிடம் சொன்னேன்..!
உலகெல்லாம் சுற்றிய பட்டாம்பூச்சி
தன் மலரை கண்டு சேர்ந்தபோது..
தனிமையில் வாடிய
மூங்
காத்திருந்த நேரம் கால் நூறாண்டு ஆயினும்
தாமதித்து வந்தவள் காதலியாதலால்
கழிந்து சென்ற காலம்கூட சுகம் தான்..!
சில மணித்துளிகள் மட்டுமே என்றாலும்
பால் நிறமாய் நீர் மாறி
என் கால் நனைக்கும் கடல் அலைகள்
என்றுமே இன்பம் தான்..!
கனவுகளும் கண்ணுறங்கும்
சாம நேரத்தில்..சிறு காத தூரத்தில்..
சரணங்களும் பல்லவிகளும்
போட்டியிட்டு கொண்டதுபோல்..
துயில் கலைத்துச் செல்லும்
அந்த சங்கீத ரயில்வண்டி..
ஸ்ருதி மாறாமல் எழுப்பும் இசைஆனந்தமே..!
காலை வேளை பனித்துளி போல்
மழையின் ஆதியாய்..
புரங்கையின் மீது வந்து விழும் முதல்த் துளி..
காதலின் தீண்டலும் தந்திடாதபேரின்பம் தான்..!
அந்தி சாயும் வேளையில
விழிகள் புணர்ந்து கண்டது காதலின் ஆதியை
காதல் அது கண்டது காமத்தின் பாதையை
காமம் அது இல்லாமல் காதல் அது என்னாகும்
காதலொன்று இல்லாமல் காமம் கொண்டு என்னாகும்
வாவென்று அழைத்ததோ உன் விழி
கவிதைகள் பொய் கொள்ளலாம் அது விதி
முத்தமிட அழைத்தது உன் இதழ்
அது பேர் சொன்னாலே போதும் என் புகழ்
கண்கள் அன்று கண்டதம்மா
இரு மனம் இணைந்ததம்மா
மும்முடி கயிற்றில் தான்
திருமணம் நிகழ்ந்ததம்மா
நிகழத்தான் கொண்டதென்ன ஓராயிரம் கனவுகள்
அச்சமது நகர்த்தின ஓசையில்ல இரவுகள்
வாகை பெற காணவேண்டும் முதிர்ச்சி
கொண்டவுடன் காணத்துடித்தது புணர்ச்சி
இடை கண்டதும் பிறந்தது ஒரு கேள்வி
பதில் கொள்ள முடி