எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
பெண்மை போற்றுவோம் (மகளிர் தினக் கவிதை) சமுதாயத்தால் ஏற்கமறுக்கின்ற... (முனைவர் த,சங்கரன்)
06-Mar-2020 7:53 pm
பெண்மை போற்றுவோம் (மகளிர் தினக் கவிதை)
சமுதாயத்தால் ஏற்க
மறுக்கின்ற வாழ்நாள்
உயிர் சரித்திரம் - பெண் ...
உடலால் மென்மையாக
உள்ளதால் உலகினை வெல்லும்
ஆற்றல் வளத்திரன்
பெற்ற மலர் - பெண் ...
இன்றைய காவியங்கள்
பாட மறுக்கின்ற
தியாகச்சுடர் - பெண் ...
ஆண் ஆதிக்க
அடிமைத் தலையிலிருந்து
மீண்டுவரத் துடிக்கும்
வீட்டில் பூச்சி - பெண் ...
இதயத்தில் வைத்து
போற்ற வேண்டிய கவிதையைக்
கவர்ச்சிப் பொருளாக்கிய
சமூகம் - பெண் ...
பிரம்மன் படைத்த படைப்பிலேயே
கடினப்பட்டு உருவாக்கிய
உன்னதப் படைப்பு - பெண் ...
தன் பலவீனத்தை
பலமாக்கி
சங்கடங்களை புதைத்து
சாதிக்க துடிக்கும்
விடியல்கள் - பெண் ...
ஆண்களின்
தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக
மாற்றி தோள்கொடுத்து
உயர்த்தும்
கானல் நீர் - பெண் ...
உலக மொழிகளில்
தேடினாலும் இணையாக
உவமைக் கிடைக்காத
உயர்திணை - பெண் ...
அன்னையாக
சகோதரியாக
தோழியாக
காதலியாக
மனைவியாக
மகளாக - என
அனைத்து உறவிலும்
நிழல் மறைவில் நின்று
ஒவ்வொரு ஆணையும்
வெற்றியாளனாக உருவாக்கும்
உன்னதமான பெண்மையை
போற்றுவோம் ...!
வணங்குவோம் ...!
த. சங்கரன்
உதவிப் பேராசிரியர் ,
தமிழ்த்துறை,
ஏ.வி .எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,
சேலம் .