Vallanadan- கருத்துகள்

கருணா ,
உங்கள் பேருக்கு ஏற்றார்ப் போல் , உங்கள் கவிதையிலும் ஈரம் . ஈரம் உங்கள் கவிதையின் சாரம் . மானுடம் பேணுதற்கு இது போன்ற கவிதைகள் மிக அவசியம். நன்றி நண்பரே .
வல்ல நாடன் ,இல. கணேசன்

ரெசிபி என்றால் உணவு தயார் செய் முறை என பொருள் .

இன்றைய சமுதாயத்தில் , வாழ்க்கையில் முன்னேற்றம் பெற்றவர்கள் எல்லோரையும் பட்டியலிட்டுப் பார்த்தால்,
அவர்களின் முன்னேற்றம் , அவர்களின் முயற்சியால்தான் அவர்களின் கல்வித்தகுதியின் பங்களிப்பு குறைவுதான்.
எடுத்துக்காட்டாக, இன்றைய காலகட்டத்தில், சுயதொழில் முனைவோர் மிகவும் குறைவு. இந்திய வணிக மேலாண்மை நிறுவனத்தில், பட்டம் பெற்று வெளியே வந்தாலும் ,முயற்சி இல்லை என்றால் முன்னேற்றம் இல்லைதான்.விஞ்ஞானிகளில் , எடிசன் ; மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் , ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் , அரசியல் கக்கன் ,
எழுத்துலகின் ஜாம்பவான்கள் பலர் என்று ,நீட்டிக்கொண்டே போகலாம். கோழையாக்கும் கல்வியை விட ,
வீரனாக்கும் முயற்சியே முன்னேற்றம் காண சிறந்தது , உகந்தது .
வல்ல நாடன் .இல. கணேசன்

முதியோர் இல்லத்தில் அதிகம் வசித்து வருவபர் பெண்களே. காரணங்கள் பலவாயினும்., முக்கியமான காரணங்கள்
1.மருத்துவ ஆய்வுகளின் படி , பெண்களின் சராசரி ஆயுள் , ஆண்களை விட அதிகம் .
2. பெண்களிடம், சகிப்புத்தன்மை குறைவு .ஆண்களிடம் சற்று அதிகம்.
3. பெண்களிடம் பொசசிவ்னஸ் அதிகம் , ஆண்களிடம் சற்று குறைவு.
4 . பெண்களுக்கு , பெண்களே எதிரி. மாமியார் , மருமகள் உடன்பாடு இல்லாதது
5. ஆண்கள் வெளி உலகத்தில் அடிபட்டு , மிதிபட்டு மொன்னையாகி , விடுகின்றான்.இடியே, இடித்தாலும்,
பொறுமைக்கு பெயர்போனவர்கள். பெண்களிடம் , வர வர அட்ஜஸ்ட்மென்ட் அருகி விட்டது. அரிதாகியும் விட்டது.
வல்ல நாடன் .இல. கணேசன்

எச்சி ஊறுகின்றது தங்களின் மாம்பழ அல்வாவின் ரெசிபியை படிக்கும் போழ்தே . கவிதை இனிக்கின்றது மாமனுக்காக செய்து வைத்திருக்கும் அல்வாவைப் போலவே . தங்களின் கவிதைகளில் நாட்டுப்புறப்
பாடல்களின் சாயல் தெரிகின்றது. மேலும் , மேலும் கிராமீய மணம் சுமந்து வரும் கவிதைகள் தங்களிடமிருந்து
கருத்தரிக்கட்டும்
வல்ல நாடன் .இல. கணேசன்

மரணம் , மரணம் மட்டுமே ,
வல்ல நாடன் .இல. கணேசன்

தன்னலமற்ற தொண்டால் .
வல்ல நாடன் .இல. கணேசன்

இருட்டில் வெளிச்சத்தைக் காட்டுவது இலக்கிய வாதியின் சொற்பொழிவு.
வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கு நம்மை நகர்த்துவது , அரசியல்வாதியின் சொற்பொழிவு.
வல்ல நாடன் .இல. கணேசன்

பண நாயகத்தை ஒழிக்க வேண்டும் .
வல்ல நாடன் .இல. கணேசன்

தாயின் அன்பு சுயநலம் அற்றது . தாரத்தின் அன்பு சுயநலம் கொண்டது . தாயின் அன்பில் எதிர்பார்ப்பு இல்லை ,
தாரத்தின் அன்பில் எதிர்பார்ப்பு உண்டு .எனவே , தாய்க்குப் பின்தான் தாரம் .
வல்ல நாடன் .இல. கணேசன்

தோழருக்கிடையில் நெருக்கம் , பகிர்தல், புரிதல், இறுக்கம் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் . சில
நேரங்களில், அது வெறும் சுட்டு விளி.நண்பன் அவ்வாறல்ல ,பகிர்தல், புரிதல் நெருக்கம் , இறுக்கம் எல்லாம்
அவசியம் . தோழமை நட்பாக மாறி , நாளடைவில் நண்பராக மாறலாம் . தோழமையை விட நண்பன் சீரியஸ் .
வல்ல நாடன் .இல. கணேசன்

முத்தம் கொடுப்பது பாவமல்ல ; யார் , யாருக்கு கொடுப்பது என்பதுதான் , நம் முன் நிற்கும் கேள்வி .மேலை
நாட்டின் நாகரீக மோகத்தில் ,தனிப்பட்ட சுதந்திரம் என்ற போர்வையில் , பொதுவிடத்தில் செய்வதுதான்
அநாகரீகச் செயல் .அதுவும் ,கலைமகள் குடியிருப்பதாய் நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் கல்விக்
கூடங்களில்? கல்விக் கூடமா? கலவிக் கூட்டமா ?மிஸ்ஸிங் எ கிஸ் இஸ் நாட் எ ஸின் .கிஸ்ஸிங் எ மிஸ்
இஸ் எ கிரேட் ஸின், தட் டூ இன் எ பப்ளிக் ப்ளேஸ் .இனிமேல் , முத்தத்தில் முன்னுறூ வகை பற்றி , மாணவச்
சமுதாயம் ஆராய்ச்சியில் ஈடுபடலாம் , அரசின் உதவித் தொகையுடன் .
வல்ல நாடன் .இல. கணேசன் .

தோழரே ,

ஆற்ற முடியா உங்கள் கோபத்தின் வெளிப்பாடாய், தெறித்து விழுந்த கனல் கக்கும் வரிகளை ரசித்தேன் .எழுத்து
வியாபாரம் ஆகி விட்ட உலகினுள் , மஞ்சள் மை நிரப்பிய பேனாக்களுக்குத்தான் மரியாதை .வியாபாரம் ,விபச்சாரம் என்றாகிவிட்ட எழுத்துலகில் உங்களைப் போல் சுத்த ஆன்மாக்கள் வலம் வருவது அரிதாகிவிட்டது .கிரிக்கெட்டில் பெட்டிங் ; காதலில் டேட்டிங் ; எழுத்தில் சீட்டிங் ; சூது கவ்வினாலும் , தர்மம் மறுபடியும் வெல்லும் .
தங்களின் உறுதிக்கு , தலை கூப்பிய வணக்கங்கள் .
வல்ல நாடன் .இல. கணேசன் .

கூட்டம் தவிர். வணிகம் தவிர்.
ரதம் போல் பெண்ணென்றாலும்' ரிதம் ' அவசியம் .
சங்கீதம் தெரிய வேண்டாம் , இங்கீதம் இருந்தால் போதும்.
ஆயிரம் காலத்துப் பயிர் செழிக்க , வித்தினை சோதித்துப் பார்

வல்ல நாடன் .இல. கணேசன்

வக்கிரத்தனமான எண்ணங்கள் .உறுப்பு அறுத்தல் .

வல்ல நாடன் .இல. கணேசன்.

யாருடன் என்பதை பொறுத்தது

வல்ல நாடன் . இல .கணேசன் .

மனசாட்சியின் கதவுகளை இருக்க மூடி விட்டு ,தாழ்ப்பாளை தூக்கி எறிந்து விடுவதால் ஊழல் வளர்கின்றது.

வல்ல நாடன் . இல. கணேசன்

சலுகையே வேண்டாம் . அடிப்படை உரிமைகளே போதும் , போதும் [ உணவு , உடை , உறைவிடம் ]

வல்ல நாடன். இல . கணேசன்

முற்றும் துறந்தவர் முனிவர்
சுற்றம் துறந்தவர் துறவி
பற்றும் துறந்தவர் முனிவர்
பட்டம் தேடுவபர் துறவி
மழித்தலும் , நீட்டலும் அற்றவர் முனிவர்
அழித்தலும், வாழ்த்தலும் பெற்றவர் முனிவர்
மடத்துக்கு அதிபதி துறவி
ஜகத்துக்கு பசுபதி முனிவர்

வல்ல நாடன் . இல . கணேசன் .



Vallanadan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே