எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெற்றி ---------- யாருடைய வெற்றியும் எழுதி வைத்து வருவதில்லை!...

வெற்றி
----------

யாருடைய வெற்றியும்
எழுதி வைத்து வருவதில்லை!
அது ஈடுபாட்டினால் வருவது...
வெற்றியை சரித்திரமாக மாற்றுவது!
வெற்றியாளர்களின் இயல்புகளை பொருத்தது!

வெற்றியாளர்கள் யாருடைய முதுகையும்
ஏணியாக பயன்படுத்தாமல்
தாமாக தன்னுடைய திறமையை
கொண்டு வெற்றி படியில் ஏறுவார்கள்!

தவறி விழுந்தால்
திரும்ப எழ தெரிந்தவனே!
சிறந்த வெற்றியாளன்!...

வெற்றியின் போது
மனிதனுக்கு
நிதானம்
அவசியமானது,
காரணம்
அவன்
பெற்ற
வெற்றியை
தக்க வைக்கும்
மந்திரம்
அது தான்.

தான் மட்டும்
வெற்றியை
அடைய வேண்டும்
என்ற எண்ணமே !
உன்னை தோல்வியை
அடைய வைக்கும்
வாசல் வழி.

ஏறிய ஏணியில்
கைகொடுத்து
பிறரையும்
ஏற வைப்பவனே!
வெற்றிக்கும் தோல்விக்கும்
அப்பாற்பட்டவன் ஆகிறான்....

அது ஏன்?
பிறராக இருக்க வேண்டும்...
நாமாகவும் இருக்கலாமே!


மனிதனை மனிதனாக
பாவிக்கும் மனம்
நம் அனைவருக்கும்
படரட்டும்


~ பிரபாவதி வீரமுத்து

நாள் : 20-Jan-15, 9:33 pm

மேலே