எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படைப்புக்களை எழுதும்போது பிரபஞ்சத்தின் கதாநாயகன் நானே என்கிறேன். எழுதியபிறகு..............

படைப்புக்களை எழுதும்போது
பிரபஞ்சத்தின் கதாநாயகன் நானே என்கிறேன்.
எழுதியபிறகு...........
நானே என்னை தேடிக்கொள்கிறேன்.
பத்திரமாகதான் இருக்கிறேன் என்று
சமாதானமும் செய்துக்கொள்கிறேன்.

சற்று நாழிகைகளில்
மமதை மயக்கம் தெளிகிறது
என் படைப்புக்களை
நானே வாசிக்கிறேன்.

சில சமயம்
வியக்கிறேன்....!

சில சமயம்
வியர்க்கிறேன்....!

சில சமயம்
நாணுகிறேன்...!

சில சமயம்
நானா என்கிறேன்....!

பல சமயம்
என் படைப்புக்கு
நானே உரிமை கோருவதில்லை.......!
ஏனென்றால்
நீங்கள் அதனை பாராட்டி இருப்பீர்கள்..!
பாராட்டியதை நான் சீராட்ட நினைத்தால்,
தலையாட்ட முடியா தலைக்கணம்
வந்துவிடும் என்ற பயம் எனக்கு.....!


-இரா.சந்தோஷ் குமார்.

நாள் : 7-Feb-15, 7:39 am

மேலே