எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏக்கமடி … ! வறண்ட நிலங்கண்ட உழவனானேன் !...

                             ஏக்கமடி … !
வறண்ட  நிலங்கண்ட  உழவனானேன் !      
        இருண்டஉன்    விழிகண்ட   நொடியில்…
திரண்ட  மேகங்காண  ஏங்கிடும்        
        நிலம்போல    விழிகள்  ஆனதடி !
உறங்கிடும்   உன்விழி  திறந்திட        
       ஏங்கிடும்  என்கவி  மொழியடி… !
வாடிடும்  பயிரை   தீண்டாத        
        மேகமங்கை  ஆனாயடி ! 
வாடிடும்  பயிரானேன்  நானே !       
       மேகமங்கை   உன்னை  காணாது…..




புயலென   வருகிறாள்   மேகமங்கை        
       பருவமழை  பொழிந்திட  என்றும்
கயலென   விழிகொண்டு   கன்னி          
       பருவகவி   பொழிந்திட  என்மீது ….    

பதிவு : xavier arun
நாள் : 9-Dec-18, 4:57 pm

மேலே