xavier arun - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  xavier arun
இடம்:  சேலம், tamilnadu
பிறந்த தேதி :  31-May-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Oct-2018
பார்த்தவர்கள்:  173
புள்ளி:  15

என்னைப் பற்றி...

ஆசிரியர்

என் படைப்புகள்
xavier arun செய்திகள்
xavier arun - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2021 12:48 pm

நானும் என்பதே
காணாச்செய்த – என்
பேனாவின் கவியே!

தேனாய் சுவைப்பதே
நானாய் மாறினேன் – என்
பேனாவின் கவியே!

விரலிடை நுழைந்து
சரவெடி பிணைத்தாய் – என்
பேனாவின் கவியே!

சொல்லில் சண்டையடி!
அவளைக் கானாவிழி – என்
பேனாவின் கவியே!

மேலும்

xavier arun - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2021 12:46 pm

• பாக்களோடு பூக்களும்
பாமாலை யாகிடவே
பாற்கடற் கடைந்திடும்
பாவலன் ஆனேனடி !

• பாதைகள் கடந்திடும்
பாதங்களை தேடினேன்!
பாதையோர புற்களும்
பூக்களென சிரிக்குதடி!

• நெற்கதிரோடு நானும்
நாற்றங்கால் பயிரானேன்!
நெற்றியோடு குங்குமம்
நற்றுந்தன் உயிராவேன்!

• மாட்டின்நடை நிலமதை
மாண்புற செய்யுமடி!
மெட்டியோலி ஓசையெனை
மேன்மையற செய்யுமடி!

மேலும்

xavier arun - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2021 12:45 pm

• பிளவுகண்ட நெஞ்சமதில்
உழவனைப் போலானேன்!
உளவுகின்ற நீ(ரி)யில்லையே..!

• மதியோடு உறக்கமில்லை!
மேணிகண்ட வெப்பத்தினால்…
கார்முகிலே நீ(ரி)யில்லையே!

• வாடி நின்ற மலரானேன்!
பாட மறந்த குயிலானேன்!
பா(ர்)மழையே நீ(ரி)ல்லையே!

• குளிரூட்டி வேண்டாமடி!
குளிர் ஊட்டும் எந்தன்
பனி நிலவே நீ(ரி)யில்லையே!

மேலும்

xavier arun - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2021 12:43 pm

வேதனைகள் வேண்டுமடி !
தேவதையுன் மடி சாய…..
வேதங்களும் தோற்குமடி!
தேவதையுன் சொற்கேட்டு…

காலணிகளும் பாரமடி!
காத்திருக்கும் வேளையிலே…
காலனும் தூரமடி !
கைப்பிடித்த உன்னருகே…

சுழலுகின்ற மின்விசிறி
சுழற்றுதடி என்னினைவை…
சிலிர்க்கின்ற கண்விசிறி
சிந்தியவளை காணாது ….

அரியணை கோலங்கள்
அலங்கார தேர்தலிலே….
சரியணை கார்முகிலாய்
வருகின்ற வெண்ணிரவே…

வாடுகின்ற பயிரெல்லாம்
வானவளை தேடுதடி !
வாடிவிடும் உயிரெல்லாம்
வருடுகின்ற விரல் தேடுதடி !

மேலும்

xavier arun - xavier arun அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2020 1:32 pm

களவாடப்பட்ட கடல்நீர்
மண்மீது மழை நீராக....
களவாடப்பட்ட மழைநீர்
மனிதர்மீது “மறை நீராக...”

களவு போனதை தேடும்
மண்ணின் பசுமை....
களவு போனதே தெரியாதது
உழவனின் விழிநீர்...

உழவைத் தேடும் மண்புழுவதன்
கலப்பை கால்களும்...
பிளவைத் தேடும் உழவனின்
நிலவதன் கால்களும்...

மேலும்

xavier arun - xavier arun அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2020 1:35 pm

பொருளாதாரமும் வாழ்வாதாரமும்
உம்மிரு கண்கள் என்றறிந்தீரே .. !
மழைநீரும் “ மறை நீரும் ”
பசுமையின் கண்கள் என்றறீவீரோ... ?

மறையுரை வேதங்களும்
திரையுலக சேதங்களும்
எவற்றை செய்கிறதோ ... ? அறியேன்..
தவறை உணர்வீரோ....?

இயற்கையன்னை தொலைத்தோம்..!
செயற்கைதனை அழைத்தோம்..!
மழை நீரை வடித்தோம்..!
“ மறை நீரை ” அறியோம்..!
மனிதனாய் வாழ்வோமா.....???

மேலும்

xavier arun - xavier arun அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2020 1:39 pm

தன்
இதழால் இயலும்
மொழியால் இசையும்
விழியால் நாடகமும்
கண்டவள் என் மொழியரசி...!

என்
வாழ்வில் இலக்கணமும்
தாழ்வில் தலைக்கணமும்
பிறழ்வில் வழித்துணையும்
உணர்த்தியவள் எனது இல்லத்தரசி!

மனதில்
பயிர்களிடம் வாழ்வையும்
உயிர்களிடம் தாழ்வையும்
செயல்களிடம் வேள்வியையும்
காணச்செய்தவள் என் உள்ளத்தரசி!

உதிரமதில்
கண்ணிரை தண்ணிராய்
பெண்மையை மென்மையாய்
உண்மையின் எண்ணமாய்
உயிர்வாழ்பவள் என் விண்ணரசி!

மேலும்

xavier arun - xavier arun அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2020 1:41 pm

• தெய்வத்தின் புன்னகை...!
உழவனிடமும்... குழந்தையிடமும்...
• கருமேகக் கூட்டம்
உழவனின் கருவறை...!
இயற்கையின் திருவருள்...!
• இறைவனை காணுங்கள்..!
வேதனையில் விழிநீர் வடிவில்...
சோதனையில் மொழியாறாய்...

மேலும்

xavier arun - M Chermalatha அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2020 5:28 pm

காதலை ‌‌‌பெற்றோர்கள் ‌‌‌‌‌‌மறுப்பதற்கான காரணம் ‌‌‌‌‌என்ன?

மேலும்

தாங்கள் கூறியது சரியே ஆனால் பெற்றோர்கள் தரும் வாழ்க்கையை பிள்ளைகள் தன் காதலை தியாகம் செய்து மனமாற ஏற்க்கின்றனர் இருப்பினும் ‌ சில நேரங்களில் ‌‌‌‌தம் காதலித்தவரை திருமணம் ‌ செய்து இருந்தால் நன்றாக வாழ்ந்து இருக்காலாம் என்று தன் வலியை மறைத்து வாழ்கின்றனர் பெற்றோர்கள் தன் உரிமையை தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக விடுதல் நல்லது அல்லவா இவ்விடத்தில் பிள்ளைகள் உயர்ந்த இடத்தில் இருக்கின்றனர் தன் பெற்றோர்களுக்காக காதலை தியாகம் செய்து அதை இனியாவது அனைத்து பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும் 26-Jun-2020 6:54 pm
தமது தேர்வே சிறந்தது என்ற எண்ணமும், தமது பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை தங்களுடையது என்ற எண்ணமுமே. 26-Jun-2020 12:25 pm
தனக்கான உரிமையை பறித்து விட்டார்களே என்ற முதல் ஈகோ , அதன்பின் வருவது ஜாதி,மதம்,வசதி ,,, 24-Jun-2020 5:11 pm
உண்மை ஆனால் இவற்றின் காரணத்தை வைத்து காதலை பிரிப்பது தவறு அல்லவா அதை ஏன் பெற்றோர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் ‌ 22-Jun-2020 11:58 am
xavier arun - செநா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2018 12:05 pm

என்னுள் சில கேள்விகள் ......

௧. கவிதைக்கு தேவை என்ன ?
௨. கவிதைக்கு என்ன தேவை?
௩. கவிதைக்கு அழகு என்ன?

மேலும்

உங்களுக்கு முன்னர் கிடைத்த பதில்கள் அனைத்தும் உரைநடைப் பொய்க் கவிஞர்களஅனுப்பியவை கவிதைக்கு தேவை ? சொல் பொருள் யாப்பு எதுகை மோனை அணி கவிதைக்குத் என்ன தேவை ? கற்பனை கவிதைக்கழகு ? மேலே சொன்ன இரண்டும் நீர் எந்தவகை கவிஞரோ யாமறியோம் 15-Apr-2023 12:31 pm
தங்களின் ஆழ்ந்த பார்வைக்கும், ஆழ்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே....... 19-Jan-2019 1:53 pm
| . மனத் தேடலின் அகழ்வாய்வுகளே கவிதை. 2. வார்த்தை ஜாலங்கள், எண்ணங்களின் சங்கமம். 3. அது வாசகரின் ரசனை சார்ந்தது 17-Jan-2019 7:23 pm
தங்களின் ஆழ்ந்த பார்வைக்கும், ஆழ்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே....... 06-Jan-2019 8:50 am
மேலும்...
கருத்துகள்

மேலே