பாவலன் நான்…

• பாக்களோடு பூக்களும்
பாமாலை யாகிடவே
பாற்கடற் கடைந்திடும்
பாவலன் ஆனேனடி !

• பாதைகள் கடந்திடும்
பாதங்களை தேடினேன்!
பாதையோர புற்களும்
பூக்களென சிரிக்குதடி!

• நெற்கதிரோடு நானும்
நாற்றங்கால் பயிரானேன்!
நெற்றியோடு குங்குமம்
நற்றுந்தன் உயிராவேன்!

• மாட்டின்நடை நிலமதை
மாண்புற செய்யுமடி!
மெட்டியோலி ஓசையெனை
மேன்மையற செய்யுமடி!

எழுதியவர் : சேவியர் arun (20-May-21, 12:46 pm)
சேர்த்தது : xavier arun
பார்வை : 62

மேலே