எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செந்தமிழ் குலகாரி செம்மண் காட்டு கொலைகாரி செங்காந்தள் விழி...

செந்தமிழ் குலகாரி


செம்மண் காட்டு கொலைகாரி


செங்காந்தள் விழி காரி


செவ்விதழ் சிந்தும்

சொல் எல்லாமே

கவிதை தானடி பெண்ணே !


சிணுங்கிடும் அணங்கே

என் சிங்கார சிலையே


அதிகாலை வேளைகளில்

உன்னை

சில நாட்களாகத்தான்

கவனித்தேன்


முகம் கழுவுகிறேன்

என்கிற பெயரில்

இத்தனை அழகையா

வேண்டாம்

என்று துடைத்து எரிந்து கொண்டிருக்கிறாய்

தினமும்


துடைத்தெறிந்த பின்னும்

துளியும் குன்றாத செழுமை

உன் முகத்தில் தானடி.


வயலாடும்  பாதங்கள்

வருடி விளையாடுதோ

புல் வெளிகளின் கூட்டம்.


எப்படி வர்ணித்தும்

முடியவில்லை ரசனைகள்.




பதிவு : Maheswari
நாள் : 24-Jul-19, 8:00 am

மேலே