எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வயதில்லா வள்ளுவன் வள்ளுவனுக்கு வயதில்லை. வள்ளுவன் என்று பிறந்தான்,...

வயதில்லா வள்ளுவன்

வள்ளுவனுக்கு வயதில்லை. வள்ளுவன் என்று பிறந்தான், இங்கு வாழ்ந்தான் இறந்தானா என்பதெல்லாம் மனிதனின் நினைப்பிற்கு அப்பாற்பட்ட விஷயம். காரணம் வள்ளுவர் ஒரு மாபெரும் சித்தர்.   
   அவருக்கு சாவு என்பதே க்கிடையாது . சாகா மூலிகைக் கண்டு அதனை முறையாய் உண்டு என்றும் உயிர் வாழும் மாபெரும் சித்தர் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
திருவள்ளுவர் எழுதிய கற்பங்கள் முன்னூறு என்கிற வாத நூலில்  என்ன எழுதியுள்ளார் என்பதைப் படியுங்கள்.

கொச்சகம்
உகந்தபடி கொடுக்க உற்பனமா எந்தனுக்கு
ஜெகந்தனிலே தாயாய்ச் ஜெனித்து மனம்பொலே
சுகந்தந்து மிக்கச் சுந்தரம் போ  லேயிரு க்கப்
புகழ்ந்துகிளி போலப் புகன்றெனக்கு தந்தாளே  ...௯௮

வெண்பா

கிலிமொழியால் காதல் கிடையா தெனக்கு
நளினமுடன் நல்ரசிதம் நல்க -- புளியதனை
தின்றேனொரு  மனதாய்ச் செய்முறைகள் தப்பாமல்
தின்றேன் பரபிரும்மம் நேர்.     ௯௯

நேர்பெறவே நான்றான் நிச்சயமாய் பூவுலகில்
சீர்பெறவே கற்ப தேகமதாய்த் தானிரு க்கத்
தார்பெறவே தந்து தரணியில்  மற்றோர் கு
ஏற்பெறவே சொல்லா தென்றிப்படி யுஞ் சொ னாளே

லேகியம் கொண்டேனான் ---ஆண்டே
லேகியம் கொண்டேனான்
லேகியம் கொண்டேனான் நெடுநாளிருப்பதற்கு
வாகுடன் பராபரை வசனித்த படிக்குயான்.

திருவள்ளுவன் அம்பிகைத்தாயர் வெள்ளி பற்பம் செய்து உண்ணமுறை சொல்ல
வள்ளுவரும் வெள்ளி பற்பமுடன் புளியெனும் தெய்வமூலியுடன் கலந்து லேகிய மாக்கி சாப்பிட்டு பரபிரும்மத்திற்கு நேராக நெடுநாளாக இருப்பதாகக் கூறுகிறார்.

திருவள்ளுவர் வாத சூத்திரம் எனும் நூலிலும் (௨)முப்பு சூஸ்த்திரம் எனும் நூலிலும்
தான்தான் இல்லரத்தாற்கு வேண்டி ஈரடியில் வேதம் சொல்லியுள்ளேன் என்று இரண்டு புத்தகங்களிலும் குறிப்பிட்டுச் சொல் லி யுள்ளார். யோகிகளுக்கு வேண்டி ஞானவெட்டி, கற்பங்கள் முன்னூறு,வைத்த்யம் எண்ணூறு ,பஞ்சரெத்தினம் ஐந்நூறு, முப்பு குரு, முப்பூ சூஸ்திரம் வாத சூஸ்திரம். கவணமணி, ஏணி எற்றம்,போன்ற பலநூல்களை எழுதியுள்ள தாகவும் கூறுகிறார். சந்தேகமின்றி வள்ளுவரும் அகத்தியர்போல போகர் போல திருமூலர் போல சாகா மூலி சாப்பிட்டு பன்னெடு்காலமாக இன்னும் உயிர் வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். யோக்கியமான மக்கள் வெண்டித் தவமிரிருப்பின் அவர்களுக்கு நேரில் தோன்றுவார். ஐயோக்கியர் கண்களுக்கு கிடைக்க மாட்டர்.










பதிவு : Palani Rajan
நாள் : 26-Sep-19, 8:26 am

மேலே