என் சகியே நீ கொண்ட மௌனம் எல்லாம் என்...
என் சகியே
நீ கொண்ட மௌனம் எல்லாம் என் வாழ்வில் எழுதாத பக்கங்கள்
உன் சூழலை உணராது உன் நிலை அறியாது நான் தவித்த தவிப்புகள் சொல்லிமாளாது!
நீ நலமா, இல்லை! நிலையில் ஏதோ மாற்றம் என்று என்னுள் எழுந்த கேள்விகளுக்குப் பதிலளிக்க யாருமில்லை.
நான் தவித்த தவிப்பை எல்லாம் உன் குரல் கேட்டு அடுத்த நொடி உடைந்தது.
அழகிய வானில் இருள் சூழ்ந்து 4 நாட்கள் இடி மின்னலுடன் மழை பெய்தது,
இன்று மேகங்கள் கலைந்து வானம் தெளிவானது உன் அழகைப் போல,
கலங்காதே தளராதே என் சகியே
துன்பங்கள் உன்னை நீங்கிப் போகும்
உன் முகம் பார்த்தாலே எனக்கு போதும்