எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கலாச்சாரம் என்ற பெயரில் எத்தனையோ பேரை அடிமை செஞ்சாச்சு...

  கலாச்சாரம் என்ற பெயரில்
எத்தனையோ பேரை அடிமை செஞ்சாச்சு
கலாச்சாரம் என்ற பெயரில்
மனிதத்தை மண்ணுக்குள் புதைச்சாச்சு
கலாச்சாரம் என்ற பெயரில்
உயிர்களின் உணர்வுகளை காய படுத்தியாச்சு
கலாச்சாரம். அந்த கலாச்சாரம்
எது தான் அந்த கலாச்சாரம்

"நம்ம கலாச்சாரம் தான் மிக சிறந்தது
உலகிலேயே மனிதர்களுக்கு அது தான் உகர்ந்தது"
என்று பெருமை பேசுவோரை பார்த்தேன்

ஒருவன் தாயை தெய்வம் என்று சொன்னான்
அவனே அவளை மாதம் நான்கு நாள்
கொள்ளையில் உக்கார வைத்தான்

மகளை ஆத்தா என்று சொன்னான்
பூ பெய்திட்ட நாள் முதல் அவளை
அவனே சந்தை பொருள் ஆக்கினான்

காதலிக்கு கவிதைகள் ஆயிரம் பாடினான்
ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்
பதில் வரலை
பளார் என்று ஒரு சத்தம் தான் வந்தது

ஆண்களுக்கே உரிமை கொடுக்கும் இந்த கலாச்சாரம்
அதற்க்கு பெயர் மட்டும் கலா என்று பெண்ணின் பெயர்

விதவையின் கண்ணீரை துடைக்காத கலாச்சாரம்
புடவையின் சிலுவையில் பெண்களை அடக்கும் கலாச்சாரம்
இது தான் நம் கலாச்சாரம். உலகின் சிறந்த கலாச்சாரம்  

நாள் : 21-Jul-20, 10:48 pm

மேலே