ஆர்விண்ட்னட்111 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆர்விண்ட்னட்111
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Oct-2015
பார்த்தவர்கள்:  93
புள்ளி:  8

என் படைப்புகள்
ஆர்விண்ட்னட்111 செய்திகள்

  கலாச்சாரம் என்ற பெயரில்
எத்தனையோ பேரை அடிமை செஞ்சாச்சு
கலாச்சாரம் என்ற பெயரில்
மனிதத்தை மண்ணுக்குள் புதைச்சாச்சு
கலாச்சாரம் என்ற பெயரில்
உயிர்களின் உணர்வுகளை காய படுத்தியாச்சு
கலாச்சாரம். அந்த கலாச்சாரம்
எது தான் அந்த கலாச்சாரம்

"நம்ம கலாச்சாரம் தான் மிக சிறந்தது
உலகிலேயே மனிதர்களுக்கு அது தான் உகர்ந்தது"
என்று பெருமை பேசுவோரை பார்த்தேன்

ஒருவன் தாயை தெய்வம் என்று சொன்னான்
அவனே அவளை மாதம் நான்கு நாள்
கொள்ளையில் உக்கார வைத்தான்

மகளை ஆத்தா என்று சொன்னான்
பூ பெய்திட்ட நாள் முதல் அவளை
அவனே சந்தை பொருள் ஆக்கினான்

காதலிக்கு கவிதைகள் ஆயிரம் பாடினான்
ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்
பதில் வரலை
பளார் என்று ஒரு சத்தம் தான் வந்தது

ஆண்களுக்கே உரிமை கொடுக்கும் இந்த கலாச்சாரம்
அதற்க்கு பெயர் மட்டும் கலா என்று பெண்ணின் பெயர்

விதவையின் கண்ணீரை துடைக்காத கலாச்சாரம்
புடவையின் சிலுவையில் பெண்களை அடக்கும் கலாச்சாரம்
இது தான் நம் கலாச்சாரம். உலகின் சிறந்த கலாச்சாரம்  

மேலும்

சிரிக்கலாமே 

அழுகையில் பிறக்கிறோம் 
 அழுகையில் மறைகிறோம் 
இடைபட்ட காலத்திலாவது 
 வாய்விட்டு சிரிக்கலாமே 
 பிறரையும் சிரிக்க வைக்கலாமே   

 ஒரே சுவை மட்டும் இருந்தால் 
 உணவு ருசிக்காது வாழ்க்கையிலும் 
 இன்பம் மட்டும் இருந்து விட்டால் 
 அதன் அருமை புரியாது   
 துன்பம் கடந்து கிடைக்கும் இன்பம் 
 பாகற்க்காய் பொரியலில் ஒளிந்திருக்கும் வெள்ளம் போல   

 வெற்றிகள் மட்டுமே இருந்துவிட்டால் 
 முயற்சிகள் இருக்காது  சோம்பல் தான் இருக்கும் 
 தோல்விகள் இல்லாமல் போய்விட்டால் 
 பாடங்கள் இருக்காது பகுமானம் மட்டும் தான் இருக்கும்   
 தோல்வியில் கிடைத்த பாடத்தில் கிடைக்கும் வெற்றி 
 பள்ளிக்கூட காதலியின் முத்தத்தை போல   

 மிச்சம் இருக்கும் வாழ்விற்கு முதல் நாள் இன்று 
 சொச்சமாக வாழாமல் அதை சுகமாக வாழலாமே   

 கண்மூடிகொண்டு உலகம் தீயது என்று 
 கேனைத்தனமாக வாழாதே 
 நீ கண்மூடும் நாள் அன்று
 நூறு பேர் அழும் படி வாழ்       

மேலும்

ஆர்விண்ட்னட்111 - ஆர்விண்ட்னட்111 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Feb-2019 9:18 pm

அவள்
இதயத்தை திருடி போனாள் என்
உறக்கத்தை திருடி போனாள்

குற்றங்கள் எல்லாம் அவள் செய்து விட்டு
ஆயுள் தண்டனை எனக்கு கொடுத்தாள்

சீதையை தேடி அனுப்பிய குரங்கை
தீவைத்த வாலால் எரிந்தது இலங்கை

கனவில் தினம் பார்த்தேன் அந்த அணங்கை
என் இமைகளை மெல்ல எரித்ததவள் சலங்கை

ஆற்றங்கரையில் மரத்தின் வேருக்கு
பஞ்சமோ பசியோ கிடையாது

ஆசை காதல் நெஞ்சத்திற்கு
தூக்கமோ பசியோ கிடையாது

தனிமையில் நின்றாலும் வள்ளுவன்
நிற்பது என்னமோ குமரியில் தான்

தனிமையில் இரவுகள் கழிந்தாலும் அது
கழிவது என்னமோ அவள் memory இல் தான்

என் கனவுகளின் screen saver ஆகிவிட்டாள்
என் computerஇன் கடவுச்சொல

மேலும்

ஆர்விண்ட்னட்111 - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2019 9:20 pm

படிப்பறிவே இல்லாத முட்டாளும்
கவிதைகள் படைக்கும் பாவலர் தினம்

சொல்லாமல் இருக்கும் காதல் எல்லாம்
இன்று சேர்ந்து மகிழ வாழ்த்துக்கள்

சேர்ந்திருக்கும் உள்ளங்கள் இன்று
என்றும் சேர்ந்திருக்க்க வாழ்த்துக்கள்

ஒருதலை ராகம் பாடியவரெல்லாம்
ரெட்டை தாளம் போட வாழ்த்துக்கள்

ரோஜா பூவோடு அலைந்தவருக்கெல்லாம்
பூ போல காதலி அமைய வாழ்த்துக்கள்

சமூகத்தின் கட்டுப்பாட்டால் உடைய போகும் காதல்
உடையாமல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

தவறான இடத்தில் கொட்டிய காதலெல்லாம்
சரியாக திரும்ப பெற வாழ்த்துக்கள்

புதுமணம் செய்த தம்பதியருக்கு
முதல் காதலர் தின வாழ்த்துக்கள்

புதியதாய் சேர்ந்த காதல

மேலும்

ஆர்விண்ட்னட்111 - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2019 9:18 pm

அவள்
இதயத்தை திருடி போனாள் என்
உறக்கத்தை திருடி போனாள்

குற்றங்கள் எல்லாம் அவள் செய்து விட்டு
ஆயுள் தண்டனை எனக்கு கொடுத்தாள்

சீதையை தேடி அனுப்பிய குரங்கை
தீவைத்த வாலால் எரிந்தது இலங்கை

கனவில் தினம் பார்த்தேன் அந்த அணங்கை
என் இமைகளை மெல்ல எரித்ததவள் சலங்கை

ஆற்றங்கரையில் மரத்தின் வேருக்கு
பஞ்சமோ பசியோ கிடையாது

ஆசை காதல் நெஞ்சத்திற்கு
தூக்கமோ பசியோ கிடையாது

தனிமையில் நின்றாலும் வள்ளுவன்
நிற்பது என்னமோ குமரியில் தான்

தனிமையில் இரவுகள் கழிந்தாலும் அது
கழிவது என்னமோ அவள் memory இல் தான்

என் கனவுகளின் screen saver ஆகிவிட்டாள்
என் computerஇன் கடவுச்சொல

மேலும்

ஆர்விண்ட்னட்111 - ஆர்விண்ட்னட்111 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2016 8:42 pm

கண்முன்னால் நடக்கும்
கொலையை வேடிக்கை பார்த்து நின்னாச்சு
Facebook பூரா பரப்பி வந்த
நம்ம ஒற்றுமை கொழுகைகள் என்னாச்சு
மனிதநேயம் கண்ணு முன்னால புண்ணாச்சு.

மேலும்

சாயம் போன நிறமானது ... :( 19-Jul-2016 7:51 pm
காலம் மாறிப் போனது 29-Jun-2016 2:24 pm
ஆர்விண்ட்னட்111 - ஸ்ரீமதி மைதிலி ராம்ஜி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2015 3:45 pm

எவராயினும் தவறு / குற்றம் புரிந்தால் தண்டனை வழங்குவது சரியா அல்லது தவறா ?

மேலும்

அடி பட்டவன் மருந்து போட்டுதான் ஆகவேண்டும் 12-Jun-2017 4:22 pm
மன்னிப்புதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் தண்டனை .. மன்னிக்கவே முடியாத குற்றம் ஏதும் இங்கு இல்லை துரோகமோ கோபமோ ...மன்னிக்க பழகிக்கொண்டால் வாழ்கை அழகாகவும் ஆனந்தமாகவும் மாறும் ...ஆனால் பழிக்கு பழி மட்டும் வேண்டாம் காலம் மட்டுமே சிறந்த மருந்து ... 09-Jun-2017 7:06 am
ஒருவன் செய்யும் தவறினால் நல்லவர்களும் ஏழைகளும் பயனடைவார்கள் என்றால் அவனை தண்டிக்கக் கூடாது.... 08-Jun-2017 9:11 pm
என்னை பொறுத்தவரையில் ஒருவன் செய்யும் தவறினால் நல்லவர்களும் ஏழைகளும் பயனடைவார்கள் என்றால் அவனை தண்டிக்கக் கூடாது.... 08-Jun-2017 9:09 pm
ஆர்விண்ட்னட்111 - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Oct-2015 11:50 pm

பிடிக்காத வேலை
போதாத சம்பளம்

லவ் பெயிலியர்
சொந்தகாரன் டார்ச்சர்

இவை அனைத்தையும்
நட்பு
என்றைய பலத்தோடு

புன்னகைத்தே கடக்கின்றான்
இன்றைய இளைஞன்.

மேலும்

அருமை 27-Oct-2015 10:33 pm
உண்மை ...,, 09-Oct-2015 12:08 am
முற்றிலும் உண்மை :) :) ... அருமை. 08-Oct-2015 11:19 pm
ஆர்விண்ட்னட்111 - ஆர்விண்ட்னட்111 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2015 11:15 pm

இந்த பாரு என் செல்ல காள
எங்க பாத்தாலும் கடன் தொல்ல
இந்த நாட்டுல உழவன பொறந்து
இன்னும் என்னென்ன கஷ்டம் தாங்கனுமோ

அடுக்கு மாடி கட்டடம் கட்டதான்
உழவு நிலத்த எல்லாம் பரிச்சுகிடாங்க
அடிமையா தான் நம்மள நடதிடுறாங்க
ஆனா சோறு திங்கும் போது மட்டும் நெனச்சுக்குறாங்க

உயிர கொடுத்து தானே பயிரெல்லாம் விளைக்குறோம்
ஊருக்கெல்லாம் சோறு போட்டு அழகு பாக்குறோம். இருந்தும்
கயிறுல தான் நம்ம வாழ்க்க முடிஞ்சு போகுது
நம்ம உழைப்பெல்லாம் கருப்பு பணமா தான் போகுது

ஏர் புடுச்ச கைல இப்போ கயிறு புடுச்சு நிக்குறேன்
ஏன் இந்த சோதனைன்னு சாமியத்தான் கேக்குறேன்
சோறு போடும் உழவனெல்லம் உயிர விட்ட அப்பா

மேலும்

நன்று 07-Oct-2015 9:53 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே